தெற்கில் இனக்­க­ல­­வரத்தை ஏற்­ப­டுத்­திய பிரே­ம­தாச யுகம் மீண்டும் தலை­தூக்க இட­ம­ளிக்க முடி­யாது: மஹிந்த

Published By: J.G.Stephan

22 Oct, 2019 | 12:02 PM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் குறித்து அனைத்து தக­வலும் கைவசம் இருந்தும் அர­சாங்கம் முஸ்லிம் வாக்­கு­களைப் பெறும் நோக்கில்   எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை.   

பயங்­க­ர­வா­தி­களின் செயற்­பா­டுகள் குறித்து  பாரம்­ப­ரிய சாதா­ரண  இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் வழங்­கிய  தக­வல்­களை   ஏன் கருத்தில் கொள்­ள­வில்லை.   தெற்கில்  இனக்­க­லவ­ர­த்தை ஏற்­ப­டுத்­திய பிரே­ம­தாச  யுகம் மீண்டும் தலை­தூக்க இட­ம­ளிக்க முடி­யாது என எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த  ராஜ­­பக் ஷ தெரி­வித்தார்.

எம்­பி­லிப்பிட்டிய  பிர­தே­சத்தில்  நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.   அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்,

தெற்கில்  இனக்­க­ல­வ­ரத்­தை ஏற்­ப­டுத்­திய முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் யுகம் வேண்­டுமா என்ற கேள்­விக்கு  பெரும்­பா­லான  மக்கள் வேண்டாம் என்ற பதி­லையே  வழங்­கு­கின்­றார்கள். ஆனால் புதிய  ஜன­நா­யக  முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச தனது தந்­தையின் நிர்­வா­கத்­தையே முன்­னெ­டுத்து செல்­வ­தாகக் குறிப்­பி­டு­கின்றார். இதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது.

30 வருட கால யுத்தம்  பாரிய போராட்­டத்துக்கு மத்­தியில்  முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்டு  தேசிய பாது­காப்பு  பலப்­ப­டுத்­தப்­பட்­டது.  ஆனால்  அர­சியல்  பழி­வாங்­க­லுக்­காக தேசிய பாது­காப்பு பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்­டது. ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் குறித்து  அனைத்து  புல­னாய்வுத் தக­வல்­கள் கிடைத்தும் அர­சாங்கம் முஸ்லிம் வாக்­கு­களைக் கருத்திற் கொண்டு  எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. 

பயங்­க­ர­வாத  தாக்­குதல் குறித்து  சாதா­ரண  முஸ்லிம் மக்கள் வழங்­கிய   செய்­தி­களை ஏன்   செயற்­ப­டுத்­த­வில்லை?  முறை­யற்­ற­வர்­களின் தேவை­க­ளினால் பாரம்­ப­ரிய  முஸ்லிம் மக்­களும் பெரிதும்  பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

பயங்­க­ர­வா­திகள் தொடர்பில்  சாதா­ரண பாரம்­ப­ரிய முஸ்லிம் மக்கள் அர­சாங்­கத்­துக்­கும் பாது­காப்புத்  தரப்­பி­ன­ருக்கும் வழங்­கிய தக­வல்கள்  ஏதும் கவ­னத்திற் கொள்­ள­வில்லை. கைது செய்­யப்­பட்­ட­வர்கள் முஸ்லிம் அமைச்­சர்­க­ளி­ன­தும் ஆளு­நர்­க­ளி­னதும்   பணிப்­பு­ரைக்­காக விடு­விக்­கப்­பட்­டார்கள். இவ்­வி­டயம் தொடர்பில் எமது அர­சாங்­கத்தில் உரிய  நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

தேர்தல் மேடை­களில் கொள்­கை­யற்ற   அர­சியல் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுப்­ப­வரை நாட்டு மக்கள் ஒரு­போதும் ஜனா­தி­ப­தி­யாக்க­ மாட்­டார்கள்.    தேசிய அர­சாங்­கத்தில் இடம்பெற்­ற­தாகக் குறிப்­பி­டப்­படும் மோச­டிகள் தொடர்பில் ஆராயும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில்  ஆளும் தரப்பின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. நாட்டு மக்கள் உண்­மை­யை அறிந்து கொள்ள ஜனா­தி­பதி   ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யை தேர்­த­லுக்கு முன்னர் பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும்.

பொரு­ளா­தா­ரமும், தேசிய  உற்­பத்­தி­களும்  கடந்த காலத்­தை விட தற்­போது தொடர்ந்து வீழ்ச்சி நிலை­யையே அடைந்­துள்­ளன. மக்­களின் வாழ்க்கைச் செல­வுகள் அனைத்தும்  அதி­க­ரித்த வண்­ணமே காணப்­ப­டு­கின்­றன. ஆனால்  ஆளும் தரப்பின் ஜனா­தி­பதி வேட்­பாளர் தனக்கும் அர­சாங்­கத்­துக்கும் இடையில் எவ்­வித தொடர்பும் இல்­லாத வகை­யிலே போலி­யான தேர்தல் வாக்­கு­று­தி­க­ளையே  வழங்­கு­கின்றார். போலி­யான வாக்­கு­று­தி­க­ளுக்கு நாட்டு மக்கள் இம்­மு­றையும்  ஏமா­ற­ மாட்­டார்கள்.

அர­சாங்­கத்தின் முறை­யற்ற செயற்­பா­டுகள் அனைத்­துக்கும்  தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரும்,  மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னரும்  தொடர்ந்து துணை­போ­யுள்­ளார்கள். தற்­போது  மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர்  அர­சாங்­கத்திலிருந்து விலகி அர­சாங்­கத்தைத் தூற்­று­வதால் எவ்­வித மாற்­றமும் இனி ஏற்­ப­டாது. முறை­யற்ற நிர்­வா­கத்தை முன்­னெ­டுத்த அர­சாங்­கத்­துக்கு  நாட்டு மக்கள்  தகுந்த பாடத்தைக் கற்­பிப்­பார்கள்.

அரச நிர்­வா­கத்தை முறையாக முன்னெடுத்துச் செல்ல முடியாத கட்சிக்கும், ஜனாதிபதி வேட்பாளருக்கும்    மக்களாணையை வழங்குவதால் எவ்வித பயனும் ஏற்படாது.  மக்கள் மனங்களை வென்றவரையே ஜனாதிபதி வேட்பாள ராகக் களமிறக்கியுள்ளோம்.  ஐக்கிய தேசிய கட்சிக்கு தகுந்த பாடத்தை நாட்டு மக்கள்  ஜனநாயக முறையில் கற்பிப்பார்கள்.  பொதுஜன பெரமுன அனைத்து தரப்பினரையும் ஒருமுகப்படுத்தி  ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை...

2025-02-10 01:57:10
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20