(நா.தனுஜா)
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மலையகத்திலும் வாழும் தமிழ்மக்கள் தமது வாக்குகளை சஜித் பிரேமதாஸவிற்கு ஏற்கனவே வழங்கிவிட்டார்கள் என்றே கூறவேண்டும். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக 90 சதவீதமான வாக்குகள் பதிவாகும். அதேபோன்று வட – கிழக்கு மாகாணங்களில் தேர்தல் பிரசாரத்திற்கான விஜயம் மேற்கொள்ளவிருக்கும் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து அந்த மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் தலைவர்கள் அனைவரும் மேடையேறுவார்கள் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்கள் மாநாடு நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகக் களமிறக்கியிருக்கும் சஜித் பிரேமதாஸவே நவம்பர் 16 ஆம் திகதியின் பின்னர் இந்நாட்டின் ஜனாதிபதி என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அதேவேளை இந்த நாட்டில் பல்வேறு விதங்களிலும் பெண்கள் புறக்கணிக்கப்பட்டுவந்த நிலையில், அவர்களை வலுவூட்டும் விதமாக இந்த பெண்கள் மாநாடு அமைந்துள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
போரை முடிவிற்குக் கொண்டு வந்ததாகக் கூறுபவர்கள் கடந்த காலத்தில் வட, கிழக்கில் எமது மக்களைக் கொன்றொழித்ததைத் தவிர வேறெதனையும் செய்யவில்லை. கடந்த அரசாங்கமே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு போதைப்பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் அதனால் குற்றச்செயல்களும் அதிகரித்தன.
எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமிருந்த காணிகள் பெருமளவில் விடுவிக்கப்பட்டன. பாலியல் வன்புணர்வுகள், சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு வடக்கு – கிழக்கு மாகாணங்களே கடந்த காலத்தில் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் 2015 ஆம் ஆண்டின் பின்னர் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வட,கிழக்கு மாகாணங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவினாலேயே நேரடியாகப் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. குறுகிய காலத்தில் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டன. தற்போது நாட்டில் வெள்ளை வான் கலாசாரம் இல்லை.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மலையகத்திலும் வாழும் தமிழ்மக்கள் தமது வாக்குகளை சஜித் பிரேமதாஸவிற்கு ஏற்கனவே வழங்கிவிட்டார்கள் என்றே கூறவேண்டும். எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வட, கிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக 90 சதவீதமான வாக்குகள் பதிவாகும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இல்லை. எனவே ஏனைய வேட்பாளர்கள் தமது வாக்குகளைப் பூச்சியத்திலிருந்து எண்ண ஆரம்பிக்கும்போது, சஜித் பிரேமதாஸ 20 சதவீதத்திலிருந்தே எண்ணத்தொடங்குவார். சஜித் பிரேமதாஸ நவம்பர் மாதம் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்காக விஜயம் மேற்கொள்ளவிருக்கிறார். அதன்போது அம்மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் தலைவர்கள் அனைவரும் சஜித் பிரேமதாஸவுடன் ஒன்றிணைந்து மேடையேறுவார்கள் என்பதை தமிழ் மக்களின் சார்பில் உறுதியுடன் கூறிக்கொள்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM