யாழ்ப்பாணத்தில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வெற் றியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக, முன் னாள் படைத் தளபதிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலகட்டத்தில், இறுதிக்கட்டப் போர் நடந்து கொண்டிருந்த போதும், போருக்குப் பின்னரான காலகட்டத்திலும் அவருடன் இணைந்து பணியாற்றிய யாழ்ப்பாணத்தில் கட்டளைத் தளபதிகளாக இருந்த இரண்டு மேஜர் ஜெனரல்கள், தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.
மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரே யாழ்.குடாநாட்டில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும், 2005ஆம் ஆண்டுக்கும் 2014 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 7 ஆண்டுகள் யாழ். படைகளின் தலைமையக கட்டளை அதிகாரிகளாக செயற்பட்டவர்களாவர். அத்துடன், மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அதற்குப் பின்னர் வடக்கு மாகாண ஆளுநராகவும் 2015 ஆட்சி மாற்றம் வரை பணியாற்றியிருந்தார். யாழ்ப்பாணத்தில் கட்டளைத் தளபதிகளாக இருந்த காலத்தில், கொண்டிருந்த தொடர்புகள், மூலங்களைக் கொண்டு கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவான பரப்புரைகளையும், அவரது வெற்றியை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் இவர்கள் எடுத்து வருகின்றனர்.
மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில், கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்தநிலையில், யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, கோத்தபாய ராஜபக்ஷவை நாட்டின் ஜனாதிபதி யாக்குவதற்கு யாழ்ப்பாண மக்கள் ஒத்துழைக்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM