பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவு பொருட்களின் சில்லறை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.
அதன்படி தற்போது மிளகாய் ஒரு கிலோவின் விலை 450-500 ரூபாவாக காணப்படுகின்றது. இறக்குமதி செய்யப்படும் காய்ந்த மிளகாய் ஒரு கிலோவிற்கு வரி 20 ரூபாவினால் குறைப்பதற்கும், இறக்குமதி செய்யப்படும் மீன் வகைகளுக்கு வரி 25 ரூபா வரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறக்கு மதி செய்யப்படும் காய்ந்த மிளகாய் ஒரு கிலோவிற்கு இதற்கு முன்னர் இறக்குமதி வரி 25 ரூபாவாகவும், மீனின் இறக்குமதி வரி 100 ரூபாவாகவும் காணப்பட்டன.
பண்டிகை காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் மீன் மற்றும், முட்டைக்கு அதிக கேள்வி எழுந்துள்ளமையினால் இவ்விரு உணவு பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு வாழ்க்கை செலவுகள் குறித்து ஆராயும் குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
அரச களஞ்சியசாலையில் தற்போது உள்ள நெல் 48,000 மெற்றிக் தொன் சிறு மற்றும் மொத்த நெல் உற்பத்தியாளர்களின் ஊடாக விரைவாக அரிசியாக்கி அதனை சதோச ஊடாக நாடு அரிசி ஒரு கிலோ, 80 ரூபாவிலும், சம்பாஒரு கிலோ 85 ரூபாவிலும், விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வாழ்க்கை செலவு குறித்து ஆராயும் குழு சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM