தோட்ட தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்தில் சிக்கல் 

Published By: Vishnu

21 Oct, 2019 | 05:49 PM
image

(இரா.செல்வராஜா)

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக தேயிலை சபையினூடாக வழங்கப்பட இருந்த ஐயாயிரம் ரூபாவை வழங்குவது தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயலென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதனால் தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக மேலதிகமாக ஐயாயிரம் ரூபாவை வழங்குவது தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயலாகுமென ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவிக்கிறார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு  தீபாவளி முற்பணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றமை வழமையான நடைமுறையாக இருந்து வருகின்றது.

தோட்ட தொழிலாளர்களுக்கு மேலதிகமாக தேயிலை சபையிடமிருந்து ஐயாயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை மலை நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு ,வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனிதிகாம்பரம் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியிருந்த நிலையில் தீபாவளி முற்பணமாக ஐயாயிரம் ரூபாய் வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

தேர்தல் தொடர்பான அறிவித்தல் தேசிய தேர்தல் ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட பின்னர் பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், நியமனங்கள், சலுகைகள் , நிவாரணங்கள் ஆகியன தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயல்கள் என தேசிய தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறது.

தேர்தல் தினம் அறிவிக்கப்பட் பின்னர் அமைச்சரவையின் அனுமதியின் பேரில் தீபாவளி முற்பணமாக ஐயாயிரம் ரூபாவை மேலதிகமாக வழங்குவதில் தேர்தல் சட்ட விதிகளை முற்றுமுழுதாக மீறும் செயலென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக மேலதிகமாக ஐயாயிரம் ரூபாய் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை குறித்து விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக ஐயாயிரம் ரூபாவை மேலதிகமாக வழங்குவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. இந்த ஐயாயிரம் ரூபாவை தேர்தலுக்கு பின்னர் அவர்களுக்கு பெற்றுக் கொடுப்போம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08