தரைமட்டத்திலிருந்து 33,000 அடி உயரத்தில் பயணித்த விமானமொன்றின் கதவை அந்த விமானத்தில் நிறை குடிபோதையிலிருந்த பயணி யொருவர் திறக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய மொஸ்கோ நகரிலிருந்து தாய்லாந்தின் புகெத் தீவிற்கு பயணித்த நோர்வைன்ட் விமானசேவையின் போயிங் 777 விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை உள்ளடக்கி 7 பேர் பெரும் போராட்டத்தை மேற்கொண்டு சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபரை மடக்கிப் பிடித்து தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து அந்த விமானம் உஸ் பெகிஸ்தானில் அவசரகால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டது.
தொடர்ந்து மதுபோதையில் குழப்பம் விளைவித்த நபர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டார். மீண்டும் அந்த விமானம் புகெத் தீவுக்கு பயணத்தை மேற்கொண்டபோது அந்த விமானத் தில் மதுபோதையில் வாக்குவாதத் தில் ஈடுபட்ட மேலும் இருவரை பிரித்து வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் விமான ஊழியர்களுக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி விமானத்தில் பயணிகளுக்கு மதுபானம் பரிமாறப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM