காணா­மல்­போனோர் பிரச்­சினை பொது­வா­ன­தொரு விட­ய­மாகும்: ரெஜினோல்ட் குரே

Published By: J.G.Stephan

21 Oct, 2019 | 12:15 PM
image

(தி.சோபிதன்)

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை பல வழி­க­ளிலும் முன்­னெ­டுத்து இன ரீதி­யான பிரச்­சினை­களைத் தோற்­று­வித்து ஆயுதப் போராட்டம் ஆரம்­ப­மா­வ­தற்கும் கார­ண­மாக ஐக்­கிய தேசியக் கட்­சியே இருந்­தது. அந்தக் கட்­சிக்கு ஆத­ரவை வெளிப்­ப­டுத்தி வரு­கின்ற தமிழ்த் தலை­மைகள் இது­வரை சாதித்­தவை என்ன என்று வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

யுத்­தத்தை வழி­ந­டத்தி வெற்றி பெற்­றது தானே எனக் கூறி­வ­ரு­கின்ற சரத் பொன்­சே­கா­விற்கு வாக்­க­ளிக்க முடி­யு­மென்றால் கோத்­த­பாய ராஜபக் ஷவிற்கு ஏன் வாக்­க­ளிக்க முடி­யாது என்றும் அவர் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

யாழ்.கே.கே.எஸ் வீதியின் சிவ­லிங்­கப்­பு­ளி­யடிச் சந்­தியில் அமைந்­துள்ள பொது­ஐன பெர­மு­னவின் அலு­வ­ல­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை நடாத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.  அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஐனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்­ஷ­விற்கு வெற்­றியைப் பெற்றுக்

கொடுக்கும் வகையில் வட மாகா­ணத்தில் பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அதிலும் சரித்­தி­ரத்தில் முதற்­த­ட­வை­யாக தமிழ்க் கட்­சி­களும் முன்னர் ஆயுத இயங்­கங்­க­ளாக இருந்த ஆயுதக் கட்­சிகள் பலவும் தமது ஆத­ரவை கோத்­த­பா­ய­விற்கு தெரி­வித்­துள்­ளன.

இவ்­வாறு நாம் அனை­வ­ரு­மாக மக்­க­ளிடம் சென்று பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்ற போது தமிழ்த் தலை­மைகள் குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தொடர்பில் கடும் அதி­ருப்­தியை மக்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

ஏனெனில் நம்பி வாக்­க­ளித்த கூட்­ட­மைப்பு இன்­றைக்கு தமக்­காக எத­னையும் செய்­ய­வில்லை என்றும் அவர்கள் தமது பத­வி­க­ளுக்­கா­கவும் சலு­கை­க­ளுக்­கா­க­வுமே அர­சுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தா­கவும் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் தேர்தல் தொடர்பில் இன்­னமும் தமது முடிவை கூட்­ட­மைப்பு அறி­விக்­க­வில்லை. அவர்கள் தாமும் குழம்பி மக்­க­ளையும் குழப்பிக் கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் மக்கள் தாம் நம்பி ஏமாந்­து­விட்டோம் என்ற ஆதங்­கத்தில் இருக்­கின்­றனர்.

கவே கூட்­ட­மைப்பும் சரி தமிழ் மக்­களும் சரி சிந்­தித்து நல்­ல­தொரு முடிவை எடுக்க வேண்டும். அந்த முடி­வி­னூ­டாக எமது வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எமது வேட்­பாளர் கோத்­த­பாய தனக்கு ஆத­ரவை வழங்­கு­மாறு தமிழ் மக்­க­ளிடம் கோரி­யுள்ளார்.

கோபம் விரோதம் இல்­லாமல் இந்தப் பிர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்ய வேண்­டு­மென சொல்­லி­யி­ருக்­கின்றார். அத்­தோடு தமிழ் மக்கள் எதிர்­நோக்கி வரு­கின்ற பல பிரச்சினைகள் தொடர்­பிலும் தீர்வை முன்­வைப்­ப­தா­கவும் கூறி­யி­ருக்­கின்றார்.

ஆகவே சிலரின் பத­வி­க­ளுக்­கா­கவும் தமது சுய­லா­ப­ங்­க­ளுக்­கா­கவும் மக்­களை ஏமாற்­று­வதை விடுத்து மக்கள் பிரச்­சினை­களைத் தீர்க்க எண்­ணி­யி­ருக்­கின்ற எமது வேட்­பா­ள­ருக்கு தமிழ் மக்கள் ஆத­ரவை வழங்க வேண்டும். அவ்­வாறு தமிழ் மக்கள் ஆத­ரவை வழங்கி எமது வேட்­பாளர் வெற்றி பெற்றால் அது தமிழ் மக்­க­ளுக்கே நன்­மை­யாக அமையும். அதனை தமிழ் மக்­களும் செய்­வார்கள் என நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம்.

மேலும் காணா­மற்­போனோர் விவ­காரம் தொடர்பில் பேசப்­ப­டு­கி­றது. அவ்­வாறு காணா­மற்­போனோர் தொடர்­பான பிரச்­சினை வடக்கு, கிழக்கில் மட்­டு­மல்ல இலங்கை முழு­வ­துமே காணப்­ப­டு­கின்­றது.

நாட்டில் ஏற்­பட்ட நிலை­மை­க­ளாலும் இயக்­கங்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட மோதல்­க­ளாலும் பலரும் காணாமல் போயி­ருக்­கின்­றனர். ஆகவே காணாமற்­போ­ன­வர்கள் என்­பது இன ரீதி­யான பிரச்­சினை அல்ல. அது முழு நாட்­டி­லுமே உள்ள பொதுப் பிரச்­சி­னை­யா­கவே பார்க்­கிறோம்.

ஆகவே தான் காணா­மற்­போனோர் விவ­காரம். அரசியல் கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு போன்ற விடயங்களை பொதுப் பிரச்சினையாக அணுகி அதற்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென மஹிந்த, கோத்தா, பசில்  ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர். எனவே இவற்றுக்கான தீர்வைக் காண்பதற்கான சந்தர்ப்பம் இப்போது தமிழ்

மக்களுக்கு வந்திருப்பதால் அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33
news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:37:48
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34