மக்கள் வங்கியானது தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கும், சிசுஉதான கணக்கு வைப்பாளர்களுக்கும், 20 மில்லியன் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில்களை வழங்கவுள்ளது.
தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் உயர் இடங்களை பெறும் மாணவர்களுக்கு உதவும் வகையில், குறித்த மாணவர்கள் தமது இரண்டாம் நிலை கல்வியைத் தொடர்வதற்கு விசேட புலமைப்பரிசில்களையும், பரிசுக ளையும் மக்கள் வங்கி வழங்கும்.அகில இலங்கை ரீதியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ. 150,000, ரூ 125,000 மற்றும் ரூ. 100,000 என்பனவும், மாவட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ. 25,000, ரூ. 20,000 மற்றும் ரூ. 15,000 பணப்பரிசு வழங்கப்படும்.
மேலும், மாவட்ட அடிப்படையிலான செயற்பாட்டிற்கு அமைய, ரூ. 5,000 பெறுமதியான புலமைப்பரிசில்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக புள்ளிகளைப் பெறும் 2,000 சிசுஉதான கணக்கு வைத்திருப்போருக்கு வழங்கப்படும். மாவட்டத்தில் முதலிடம் பெறும் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பாடசாலைகளுக்கும் நிதி ரீதியாக இந்த சிசுஉதான நிகழ்ச்சி பங்களிக்கும்.
2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதியன்று, ஆகக் குறைந்தது ரூ. 5,000 கணக்கு மீதியுடன், புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெறும் (மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளியின் அடிப்படையில்) சிசு உதான கணக்கு வைத்திருப்பவர்கள், இந்த புலமைப்பரிசிலுக்கு தகுதியானவர்கள். பெறுபேறுகள் வெளிவந்ததும், தமது சிசு உதான கணக்கு வைத்திருக்கும் மக்கள் வங்கி கிளைக்குச் சென்று, சம்பந்தப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM