(நா.தனுஜா)
சஜித் பிரேமதாஸ நாட்டை முன்நோக்கிக் கொண்டுசெல்லக்கூடிய ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் அதற்கு அவசியமான இளமையையும் கொண்ருக்கிறார்.
எவ்வித சிக்கல்களுமின்றி எதிர்வரும் 10 வருடகாலத்திற்கு அவரால் நாட்டிற்கு சிறப்பான சேவையை ஆற்றமுடியும். எனவே இளைஞர்கள் தமது பிரதிநிதியைத் தெரிவுசெய்யும் போது நீங்கள் நன்கு சிந்தித்துத் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதித் தேர்தலை முன்நிறுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய இளைஞரணியின் தலைவரும், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தினார்.
இரத்தினபுரியில் இன்று புதிய ஜனநாயக முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞரணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்வித தொடர்புமில்லாத பல்வேறு இளைஞர் அமைப்புக்கள் கூட சஜித் பிரேமதாஸவே இந்நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன.
அதேபோன்று நாம் அமைத்திருக்கும் தேசிய இளைஞரணி ஜனாதிபதித் தேர்தலை மாத்திரம் மையப்படுத்தியதல்ல என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த நாட்டின் இளைஞர், யுவதிகள் அனைவரையும் கருத்திற்கொண்டு நாம் ஒரு கொள்கையை உருவாக்குகின்றோம்.
அதனை எதிர்வரும் 28 ஆம் திகதி சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள தேசிய இளைஞர் மாநாட்டில் வைத்து சஜித் பிரேமதாஸவிடம் கையளிப்பதுடன், அதுகுறித்து மாநாட்டில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் அவருடன் கலந்துரையாட முடியும். அதனூடாக இறுதிப்படுத்தப்பட்ட இளைஞர் கொள்கையை நாட்டின் சட்டமாக்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.
ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாஸவிற்கு 52 வயதே என்றபோதும் அரசியலில் 20 வருடகாலம் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறார்.
அதுமாத்திரமன்றி பிரதி அமைச்சு மற்றும் அமைச்சுப் பதவிகளையும் வகித்திருப்பதால் பெரும் அனுபவ அறிவைக் கொண்டிருக்கிறார். அவர் நாட்டை முன்நோக்கிக் கொண்டுசெல்லக்கூடிய ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் அதற்கு அவசியமான இளமையையும் கொண்ருக்கிறார் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM