கோத்தாபய ராஜபக்ஷவை வட - கிழக்கு மக்கள் நிராகரிப்பார்கள்: த.தே.கூட்டமைப்பும் எமக்கு ஆதரவளிப்பர்

Published By: J.G.Stephan

17 Oct, 2019 | 02:43 PM
image

(நா.தனுஜா)

வட,கிழக்கு மக்கள் எதிர்பார்த்த ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நாமே உறுதி செய்தோம். எனவே நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிப்பார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் எதிரணி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு நிச்சயமாக வாக்களிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எமக்கான அவர்களின் ஆதரவை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததிலேயே கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 மேலும் அவர் தெரிவித்ததாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தில் இன்று யாழ் சர்வதேச விமானநிலையம் திறந்துவைக்கப்படுகிறது. அதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அங்கு சென்றிருக்கின்றார். அங்கும் அவர் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவார்.

அதேபோன்று எமது அரசாங்கமே தெற்கைப் போன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தது. தற்போது சர்வதேச விமானநிலையம் ஒன்றும் வடக்கில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அவற்றை விடவும் வட,கிழக்கு மக்கள் எதிர்பார்த்த ஜனநாயகத்தையும், சுதந்திரத்தை நாமே உறுதி செய்தோம்.

எனவே நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிப்பார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் எதிரணி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு நிச்சயமாக வாக்களிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எமக்கு அவர்களின் ஆதரவை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுண்டு. அதனை அவர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21