(இராஜதுரை ஹஷான்)
யுத்த வெற்றியை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையாளர் குறிப்பிடுவதன் பின்னணி என்ன எனக் கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனிருத்த, அது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் பாதுகாப்பு செயலாளராக கோத்தபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அவரது வழிநடத்தலின் பெயரிலே யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. யுத்தத்தை வெற்றிக் கொண்டவரையே பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளது.
ஆகவே தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த விடயங்களையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM