கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மீது முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்வைத்துள்ள விமர்சனங்கள் தொடர்பில் பகிரங்கமாக ஒரே மேடையில் பேசுவதற்கு வருமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் காத்தான்குடி மற்றும் ஏனைய பிரதேசங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசாரக் கூட்டங்களில் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றார்.
நான் ஒரு பச்சோந்தி என்றும் துரோகி என்றும் பெரும் காட்டிக் கொடுப்பு என்றும் என் மீது மிக மோசமான விமர்சனங்களை அவர் தொடுத்து வந்திருக்கின்றார்.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர் நான் பெட்டிப்பாம்பாக போனதாகவும் ஒரு வார்த்தை கூட பேசவில்லையெனவும் என்னை அவர் காப்பாற்றினார் என்றும் எனது பல்கலைக்கழகம் தொடர்பாக நான் பேச விரும்பவில்லை எனவும் அதில் இடம்பெற்றுள்ள ஊழல் தொடர்பில் நான் கதைக்க விரும்ப வில்லை எனவும் ஹக்கீம் பேசி வந்ததை நான் பார்த்தேன்.
இதற்கு நான் அவருக்கு பதிலளிக்க தொடங்குகின்றபோது முஸ்லிம் சமூகத்துக்குள்ளே ஒரு பிளவை அல்லது நாங்களே எங்களை விமர்சனம் செய்கின்ற நிலையை இந்த தேர்தல் காலத்தில் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற அடிப்படையில் மிகுந்த மரியாதையும் கௌரவமும் நான் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது வைத்துள்ளேன்.
ஆகவே நாங்களிருவரும் ஒரே மேடையிலே நான் ஏன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றேன். இந்த சமூகத்துக்கு கிடைக்க வேண்டிய நன்மை என்ன என்பது தொடர்பாகவும் நான் எந்த வகையிலான பச்சோந்தி, எவ்வாறான காட்டிக் கொடுப்புக்களை செய்தேன்.
எந்த வகையில் இந்த சமூகத்துக்கு துரோகம் செய்தேன். ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் பெட்டிப்பாம்பாக பேசாமல் இருந்தேனா? இந்த தேர்தலில் நான் போட்டியிடுவதன் மூலம் எவ்வாறு இந்த சமூகத்துக்கு துரோகம் இழைத்துள்ளேன். யாரைக் காட்டிக் கொடுத்துள்ளேன் என நீங்கள் கூறிய விடயங்களுக்கெல்லாம் நாங்கள் இரண்டு பேரும் ஒரே மேடையில் பேசுவதனூடாக மக்களுக்கு தெளிவுபடுத்தமுடியும்.
நாமிருவரும் ஒரே மேடையில் பேசுவோம். அம்பாறை மாவட்டத்திலே நீங்கள் விரும்புகின்ற ஒரு பிரதேசத்திலே நீங்கள் விரும்புகின்ற நேரத்திலே நான் உங்களோடு பேசுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றேன்.
தயவு செய்து அதற்கான காலத்தையும் இடத்தையும் நீங்கள் தெரிவு செய்யுங்கள். அதற்கு தேவையான சகல ஒழுங்குகளையும் மேற் கொள்ள நான் ஆயத்தமாக இருக்கின்றேன். இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குள் நானும் நீங்களும் ஒரே மேடையில் பேசுவோம். இது வெறுமனே பேச்சு மாத்திரம் தான். சமூகத்திலே இருக்கின்ற முக்கியமான புத்தி ஜீவிகள், உலமாக்கள், கல்விமான்கள் முன்னிலையில் நாமிருவரும் பேசுவோம்.
உண்மையிலேயே இந்த தேர்தலில் நான் போட்டியிடுவது உங்களைப் பொறுத்த வரையில் பாரிய துரோகம், சமூகக் காட்டிக் கொடுப்பு, பச்சோந்தித்தனம் என நீங்கள் சொல்வதை அதன் போது மக்களிடம் சொல்லுங்கள். நான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன் என மக்கள் மத்தியில் சொல்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றேன். அதனை மக்கள் தீர்மானிக்கட்டும்.
மேடைகளைப் போட்டு நீங்கள் என்னை ஏசுவதையும் உங்களுக்கு நான் பதிலளிப்பதையும் தவிர்த்து விட்டு உடனடியாக இன்றிலிருந்து ஏழு நாட்க ளுக்குள் உங்களின் பதிலை எதிர்பார்க் கின்றேன். ஆதரவாளர்கள் ரவூப் ஹக்கீமை இதற்காக தூண்டவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM