2010 இல் சரத் பொன்­சே­காவை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு ஆதரித்தமைக்கான காரணத்தை கூறுகிறார் அரியநேத்திரன்

Published By: R. Kalaichelvan

17 Oct, 2019 | 11:15 AM
image

2010ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் சரத் பொன்­சே­காவை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கண்ணை­மூ­டிக்­கொண்டு ஆத­ரிக்­க­வில்லை.

அப்­போ­தி­ருந்த 22 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­றி­ணைந்து வடக்கு–கிழக்கை இணைத்தல், அர­சியல் தீர்வு, கைதி­களின் விடு­தலை உள்­ளிட்ட பல விட­யங்­களை உள்­ள­டக்­கிய ஆவ­ணங்­களைப் பார்த்­ததன் பின்­னரே  நாம் அவ­ருக்கு ஆத­ரவு வழங்­கினோம். அதனை நாங்கள் வெளி­யிட வேண்டாம் என்ற ரீதி­யி­லேயே நாம் அதனை  வெளியில் சொல்­ல­வில்லை.

 ஆனால் எமது சக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் ஊடக சந்­திப்­பொன்றில் மக்­க­ளிடம் சொல்­ல­வேண்­டிய தேவை இருந்­ததன் கார­ண­மாக சரத் பொன்­சே­காவிடம் நாங்கள் செய்து கொண்ட எழுத்து மூல­மான உடன்­ப­டிக்கை பெற்­றி­ருக்­கின்றோம் என்­பதைக் கூறி­விட்டார். 

அதன் பின்னர் சிங்­கள ஊட­கங்கள் சரத் பொன்­சேகா நாட்டைப் பிரித்துக் கொடுக்­கப்­போ­கின்றார் எனத் தெரி­வித்து, அதனை மீண்டும் மீண்டும் சிங்­கள  ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்­தி­யதன் கார­ண­மா­கத்தான் சரத் பொன்­சேகா 2010ஆம் ஆண்டில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­யுற்றார் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பாக்­கி­யச்­செல்வம் அரி­ய­நேத்­திரன் தெரி­வித்­துள்ளார். 

தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் பெண் போரா­ளி­யா­க­வி­ருந்து வீரச்­சாவைத் தழு­விக்­கொண்ட மால­தியின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று  மட்­டக்­க­ளப்பு வெல்­லா­வெ­ளியில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்,

பெண் விடு­தலை பற்றி கூறி­யவர் பார­தியார். அதனை செயலில் காட்­டி­ய­வர்கள் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தி­லி­ருந்த பெண் போரா­ளி­கள்தான். அதிலே முத­லா­வது பெண்­போ­ரா­ளி­யாக கரு­தப்­ப­டு­பவர் வித்­தா­கி­ய­வர்தான் மாலதி. ஆண்­க­ளுக்குச் சரி­நிகர் சம­மாக பெண்­வி­டு­த­லையை எவ்­வாறு பெறலாம் என்­பதை செயலில் காட்­டி­யி­ருந்தார். மால­தியின் இலட்­சியப் போராட்­டத்தின் வடி­வங்­கள்தான் தற்­போது மாறி­யுள்­ளன. மாறாக இலட்­சி­யங்கள் இது­வ­ரையில் மாற­வில்லை. தந்தை செல்வா எடுத்த அந்த அகிம்சை ரீதி­யான போராட்டம் தலைவர் பிர­பா­க­ரனால் ஆயுத ரீதி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு தற்­போது  இராஜதந்­திர ரீதி­யாக எமது தலைவர் முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்றார்.  தற்­போது எமது விடு­தலைப் போராட்­டத்தை சர்­வ­தேசம் தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­யாக மாறி­யுள்­ளது. 50 ஆயிரம் மாவீ­ரர்கள் மற்றும் 3 இலட்­சத்­திற்கு மேற்­பட்ட பொது­மக்­க­ளையும் இழந்த நிலையில் நாம் இவ்­வா­றான நிகழ்­வு­களில் கலந்­து­கொண்­டி­ருக்­கின்றோம்.

போரா­ளியின் நிகழ்­வு­க­ளையும், தமி­ழர்­களை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட படு­கொ­லை­க­ளையும் ஏன் நினைவு கூரப்­ப­ட­வேண்டும் என்றால் எவ்­வா­றான தியா­கங்­களை எமது மக்கள் செய்­தி­ருக்­கின்­றனர் என்­ப­தனை  எமது அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்கு அறி­யப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான். மாறாக இவ்­வா­றான நிகழ்­வுகள் மீண்டும் ஒரு ஆயு­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பிப்­ப­தற்­காக வேண்­டியோ, அல்­லது ஆயு­தப்­போ­ராட்டம் ஏந்தி விடு­தலை பெறு­வ­தற்­கா­கவோ அல்ல என்­பதை அனை­வரும் புரிந்து கொள்­ள­வேண்டும்.

முள்­ளி­வாய்க்­காலில் இறுதி யுத்தம் நிறைவு பெற்று 10 வரு­டங்கள் நிறைவு பெற்­றுள்ள போதிலும் எந்­த­வொரு தீர்வும் எமக்கு  பேச்­சு­வார்த்தை மூல­மாக  கிடைக்­கப்­பெ­ற­வில்லை.  தமி­ழீழ விடு­தலைப் புலிகள் மௌனித்­த­திற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எவ்­வ­ளவோ விட்­டுக்­கொ­டுப்­புடன், மிகவும் நேர்த்­தி­யாக செயற்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் சுதந்­திர தின நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கலந்­து­கொண்ட வர­லாறு கிடை­யாது. ஆனால் எமது தலைவர் சம்­பந்தன் கலந்துகொண்­டி­ருக்­கின்றார். எக்­கா­லத்­திலும் தேசியக் கொடியைப் பிடித்த வர­லாறு கிடை­யாது. ஆனால் குறித்த ஒரு மே தின நிகழ்வில் தற்­செ­ய­லாக பிர­தமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்க கொடுத்த கொடியை சம்பந்தன்  பிடித்­து­விட்டார் என்ற கருத்­துக்கள் எழுந்­தி­ருந்­தன. இவ்­வாறு பல விட்­டுக்­கொ­டுப்­புக்­களைச் செய்­தி­ருந்த போதிலும் எமக்கு இது­வ­ரையில் ஒரு நிரந்­தர அர­சியல் தீர்வு கிடைக்­க­வில்லை. இந்­நி­லை­யில்தான் நாங்கள் இன்­னு­மொரு ஜனா­தி­பதித் தேர்­தலை சந்­திக்க இருக்­கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தொடர்ச்­சி­யாக ஜன­நா­யக ரீதி­யாக மக்கள் ஆணையைப் பெற்ற கட்­சி­யா­கத்தான் இன்­று­வரை உள்­ளது. ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் எமது முடிவை சர்­வ­தேசம் வரை பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் 35 வேட்­பா­ளர்­களில் கோத்த­பாய ராஜ­பக் ஷ, சஜித் பிரே­ம­தாச மற்றும் அனு­ர­கு­மார திசா­நா­யக்க ஆகிய 3 முதன்மை வேட்­பா­ளர்­களில் ஒருவர் தான் ஜனா­தி­ப­தி­யாக வரப்போகின்றார். ஏனையோர் போடுகாய் வேட்பாளர்களாக உள்ளனர்.  3 பிரதான வேட்பாளர்களுள் தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரக்கூடியதாக எந்தவொரு வேட்பாளரும் இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04