(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயரத்னம் ஸ்ரீ ரங்கா உட்பட 6 பேரை கைதுசெய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஸ்ரீ ரங்கா செலுத்தியதாக கூறப்படும் ஜீப் ரக வாகனம் செட்டிக் குளத்தில் வைத்து விபத்துக்குள்ளானதில் அமைச்சரவை பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி குறித்த சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்தியமைக்கு மேலதிகமாக அதனை மறைக்க போலி ஆவணங்களை உருவாக்கியமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயரத்னம் ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 6 பேரைக் கைதுசெய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்செய்து சந்தேகநபர்களாக பெயரிட்டு அவர்களிடம் மேலதிக வாக்கு மூலம் பதிவு செய்யுமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தின் விஷேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளருக்கு அவர் இந்த ஆலோசனையை இன்று எழுத்து மூலம் வழங்கியதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
இதேவேளை இவர்களை கைது செய்ததன் பின்னர், அவர்களிடம் நடத்தும் விசாரணைகளில் போலி ஆவணங்களை தயாரிக்க ஆலோசனை வழங்கியவர்கள் தொடர்பில் விஷேடமாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.
ஏற்கனவே இடம்பெற்றுள்ள ஆரம்பகட்ட விசாரணைகளில் அப்போதைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் தொடர்பில் தகவல்கல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் அது தொடர்பில் மேலதிக விசாரணைகளில் அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM