(நா.தனுஜா)
போரை நானோ அல்லது என்னுடைய சகோதரனோ வழிநடத்தி வெற்றிபெறச் செய்யவில்லை. அதற்கான தலைமைத்துவத்தை நாங்கள் வழங்கவில்லை. மாறாக இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவே போரை வழிநடத்தி, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதை கோத்தபாய ராஜபக்ஷ அவராகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார். பொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது. ஒருநாளில் உண்மை வெளிவந்தே தீரும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உண்மையில் இராணுவத்தினரைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதும் ஒருவர், போரின் பாதிப்புக்கள் தொடர்பான கேள்விக்கு 'எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நான் இதற்குப் பொறுப்புக்கூற மாட்டேன்' என்று நழுவமாட்டார். இதுவா சிறந்த தலைமைத்துவம்? இதுவா இராணுவத்தினரைப் பாதுகாக்கும் தலைமைத்துவம்? யுத்தப் பாதிப்பைப் பற்றிக்கேட்டவுடன் கோத்தாபய ராஜபக்ஷ சரத்பொன்சேகாவை நோக்கி பந்தைக் கைமாற்றிவிட்டார். ஆனால் அவரைப் போன்று பந்தைக் கைமாற்றுபவன் நானல்ல. நாட்டின் தலைவன் என்ற ரீதியில் இராணுவத்தினரின் நலனுக்காக எவ்வித அர்ப்பணிப்பையும் செய்யத் தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய ஜனநாயக முன்னணியினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொடன்கஸ்லந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் எனது பிரதிவாதி கோதபாய ராஜபக்ஷ மேஜர் ஜெனரல் 5 பேரையும், பிரிகேடியர் 5 பேரையும், கேணல் ஒருவரையும், கப்டன் தரத்திலுள்ள இருவரையும் 24 மணிநேரத்திற்குள் பதவியிலிருந்து நீக்கினார். அத்தகைய ஒருவரால் எவ்வாறு நாட்டை முன்நிறுத்தி நியாயமாக செயற்பட முடியும்? கோதபாய ராஜபக்ஷவினால் ஏன் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்த முடியாமல் உள்ளது, அவரால் ஏன் ஊடகவியலாளர்களின் வினாக்களை எதிர்கொண்டு பதிலளிக்க முடியாது என்ற கேள்விக்குத் தற்போது பதில் கிடைத்திருக்கிறது. அதனாலேயே செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்கமுடியாத நிலையை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால் எனது சவாலுக்கு இணங்கியேனும், நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் உண்மையைக் கூறிவிட்டார். பத்துவருட காலத்தின் பின்னர் அவர் உண்மையை வெளிப்படுத்தியது குறித்து நான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM