வீதியைத் தோண்டி மண் எடுத்தவர்களுக்கு எதிராக முறைப்பாடு!

Published By: Digital Desk 4

15 Oct, 2019 | 07:12 PM
image

சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையினால் நீர் குறுக்கறுத்து வீதி ஒன்று உடைந்து காணப்பட்டது. அவ்வாறு உடைந்து காணப்பட்ட வீதியிலுள்ள மண்ணை சிலர் தோண்டி எடுத்து உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ரஹ்மத் நகர் பகுதியிலுள்ள வீதியில் காணப்பட்ட மண்ணையே இவ்வாறு நேற்று ஏற்றிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சனநடமாட்டம் இல்லாத நேரத்தில் இவ்வாறான திருட்டு வேளை இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தும் விதத்தில் அம்மண் காணப்பட்டதால் அதனை விற்பனை செய்ய உழவு இயந்திரத்தில் ஏற்றி சென்றுள்ளனர் என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சட்டவிரோத செயலைச் செய்தவர்களை கண்டுபிடிக்க பொலிஸார் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39