இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் திலங்கசுமதிபால எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் நிர்வாகத்தில் எந்த வித பதவிகளையும் விதிக்க முடியாதென இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ உத்தியோகபூர்வ தடையை விதித்துள்ளார்.
அமைச்சர் ஹரீன்பெர்ணான்டோ நியமித்த மூவர் கொண்ட குழுவின் பரிந்துரைக்கு அமையவே இந்த தடையை விதித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ திலங்க சுமதிபால எந்த குழுவினதும் எந்த கூட்டத்திலும் கலந்துகொள்வதை தடுக்குமாறும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
திலங்க சுமதிபால வாக்களிப்பதையும் கடந்த கால தலைவர் என்ற அடிப்படையில் செயற்படுவதையும் இலங்கை கிரிக்கெட்டை பிரதிநிதித்துவம் செய்வதையும் தடைசெய்யுமாறு அமைச்சர் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தான் நியமித்த குழுவின் அறிக்கை வெளியாகும் வரை முன்னர் திலங்க சுமதிபாலவிற்கு தடைவிதித்திருந்தார்.தற்போது குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளதை தொடர்ந்து உத்தியோகபூர்வமாக தடையை விதித்துள்ளார்.
இதேவேளை இந்த தடை குறித்து தான் இன்னமும் அறியவில்லை என தெரிவித்துள்ள திலங்கசுமதிபால எனக்கு அறிவிப்பதற்கு முன்னர் அமைச்சர் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார் சிறுவர்கள் அரசாங்கத்தினை நடத்தினால் இதுதான் நடக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM