ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற வேண்டுமென்பதை மக்கள் முன்கூட்டியே தீர்மானித்து விட்டார்கள். அதேபோன்று தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தமிழ் முற்போக்கு கூட்டணி உறுதியான தீர்மானத்தை எடுத்து அதற்கான அழுத்தத்தைக் கொடுத்திருந்தது.
இப்போது சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு கைக்கொடுக்க எமது கூட்டணி களமிறங்கியுள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சர் திகாம்பரம் நேற்று நுவரெலியா செல்லும் வழியில் அட்டன் நிக்ரோமாதாராய பௌத்த விகாரைக்கு சென்று வழிபாடு மேற்கொண்டிருந்தார். வழிபாடு செய்த பின்னர் விகாராதிபதி விமலநாயக்க தேரரை சந்தித்தார்.
அப்போது அமைச்சர் திகாம்பரம் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி தமது பிறந்த தினத்தன்று மேற்படி விகாரைக்கு வந்திருந்த போது, 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த விகாரையின் கூரை உட்பட திருத்த வேலைகளுக்காக 50 இலட்சம் ரூபா நிதியை வழங்கி உதவியமைக்காக நிர்வாகக் குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.
நிகழ்வில் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், எம். ராம், சப்ரகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவர் ஜி. நகுலேஸ்வரன் மற்றும் நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கோ அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கோ எந்தவிதமான தடுமாற்றமும் கிடையாது.
தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தமிழ் முற்போக்கு கூட்டணி உறுதியான தீர்மானத்தை எடுத்து அதற்கான அழுத்தத்தைக் கொடுத்திருந்தது. அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு கைக்கொடுக்க களமிறங்கியுள்ளோம்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தியது. அந்த நேரத்தில் மலையக மக்களுக்கு தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் அவற்றுக்கான காணி உரிமைப் பத்திரங்களை வழங்கவும் நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதேச சபைகளை அதிகரிக்கவும் பிரதேச செயலகங்களை அமைக்கவும் மலையக அபிவிருத்திக்கென தனியான அபிவிருத்தி அதிகார சபையை உருவாக்கவும் கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொண்டு வந்தோம். அத்தோடு, நாம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றிக் காட்டினோம்.
மலையக பெருந்தோட்ட மக்கள் காலங் காலமாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு வாக்களித்து வந்த போதிலும் அவற்றின் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது. எனவே, அதற்குத் தடையாக இருந்த பிரதேச சபை சட்டத்திலும் திருத்தங்களை கொண்டு வந்து பிரதேச சபையின் சேவைகளை தோட்ட மக்கள் பெற்றுக் கொள்ள வழிவகுத்தோம்.
தனி வீட்டுத் திட்டத்தோடு பெருந்தோட்ட மக்களுக்கு உலக வங்கியின் உதவியோடு சுத்தமான குடிநீர் திட்டங்கள், விளையாட்டு மைதானங்கள், கார்ப்பெட் பாதைகள் போன்ற அடிப்படை தேவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் நாம் முன்வைத்திருந்த பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்னும் பல வேலைத் திட்டங்களை நிறைவேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் சந்திப்புகளை மேற்கொண்டு தெளிவுபடுத்தியுள்ளோம்.
அவர் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்து அதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இணக்கம் தெரிவித்துள்ளார். எனவே, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி வாகை சூட நாம் முன்னின்று பாடுபடத் தீர்மானித்து விட்டோம். எமது மக்களும் தயாராக இருக்கின்றார்கள்.
மேலும், சஜித் பிரேமதாசவின் வெற்றி நாட்டு மக்களால் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. அதில் எந்த விதமான மாற்றமும் கிடையாது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு நுவரெலியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 75 வாக்குகள் கிடைத்திருந்தன. மஹிந்த ராஜபக் ஷவுக்கு 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே கிடைத்திருந்தன. அதேபோன்று இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு 2 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் நிச்சயம் கிடைக்கும்.
அவர் அமோக வெற்றி பெற்று இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதை யாராலும் தடுக்க முடியாது. மலையகத்தில் உள்ள ஏனைய அமைப்புகள் அவற்றின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானத்தை மேற்கொள்ளும் போது அது தொடர்பில் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.
மலையகத்தின் பல பகுதிகளிலும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு தொடர்ச்சியாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவர் கலந்து கொள்ளும் பிரமாண்டமான கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM