ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிந்திய சூழ்நிலைகளில் முஸ்லிம்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே இருக்கின்றனர். அந்த நெருக்கடிகளிலிருந்து மீளும் வகையில் அம்மக்களின் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அப்பேரவையின் பிரதம இணைப்பாளர் முஹம்மது சமீம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் அண்மைக்காலமாக அரசியல் ரீதியாகவும், சமூகரீதியாகவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இலங்கை முஸ்லிம் மக்களை நெருக்கடிக்குள் தள்ளிவிடுகின்ற அமைப்பில் திட்டமிட்டு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களும் அரங்கேற்றப்பட்டன.
இலங்கையில் காணப்படுகின்ற பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளை விடவும் இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் காரணமாகக் காட்டி பாதுகாப்பு சார்ந்த விடயம் முக்கியத்துவமடைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலினை எதிர்கொள்ளும் இலங்கை முஸ்லிம் மக்கள் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு தமது தேர்தல் தெரிவுகளை மேற்கொள்ளமுடியும் என இலங்கை முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகப் பிரதிநிதிகளாகிய நாம் எதிர்பார்க்கின்றோம்.
ஜனநாயக சமூகமொன்றில் மிகமுக்கியமான நிகழ்வாக தேர்தல்கள் நோக்கப்படுகின்றன. அதுவே மக்களின் விருப்பினை வெளிப்படுத்தும் ஒழுங்குபடுத்தப்பட்ட முக்கிய நிகழ்வாகவும் அமைந்திருக்கின்றது. அந்தவகையில் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதை அதிகூடியவகையில் உறுதிச்செய்தல் அவசியமாகும்.
இலங்கை முஸ்லிம்கள் எப்போதும் நாட்டு நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றவர்கள், அந்தவகையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் நாம் நாட்டு நலன்களுக்கே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். நாட்டில் இழையோடியிருக்கின்ற இனவாதத்தை தோற்கடித்து, நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படுகின்ற இனப்பிரச்சினைக்குத் தீர்வினை வழங்குவதன் மூலம் அனைத்து இன மக்களுக்கும் ஐக்கியமாகவும், சமாதானமாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை உறுதி செய்வதற்கும், நாட்டில் நிலைத்து நிற்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்தை முன்னெடுக்கக்கூடிய செயற்றிட்டங்களுக்கு நாம் நமது ஆதரவினை முன்வைக்கவேண்டும்.
எனவே மேற்படி முஸ்லிம் சமூகத்தின் நலன்களை அதிக அளவில் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவருக்கு முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை வழங்கமுடியும். மேற்படி ஆலோசனைகளை அடிப்படையாகக்கொண்டு எமது மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலினை எதிர்கொள்வார்க்ள் என எதிர்பார்க்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM