"இரத்தத்தை, வியர்வையையும் மண்ணில் சிந்தினோம், கழுத்துப்பட்டி அணிந்து கொழும்பில்போர் செய்யவில்லை"

Published By: Vishnu

11 Oct, 2019 | 05:25 PM
image

(நா.தனுஜா)

நான் கொழும்பில் கழுத்துப்பட்டி அணிந்துகொண்டு போர் செய்யவில்லை எனத் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, நாங்கள் எங்களுடைய இரத்தத்தை, வியர்வையை, கண்ணீரை இந்த மண்ணில் சிந்திக்கொண்டிருந்த தருணத்தில் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவிற்குச் சென்று தங்கியிருந்தார். அவருடைய சகோதரன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரே அவருக்கு இலங்கை மீண்டும் நினைவிற்கு வந்தது என்றும் கூறினார்.

இந்த நாட்டினதும், நாட்டுமக்களினதும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை என்னிடம் கையளிப்பதாக சஜித் பிரேமதாச உங்கள் முன்நிலையில் பகிரங்கமாகக்கூறி, மக்களுடன் ஒரு உடன்படிக்கைக்கு வந்திருக்கின்றார். அவருடைய அந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் முழுமையாகப் பூர்த்திசெய்வேன் என்றும் உறுதியளித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமானது. 

அக்கூட்டத்தில் உரைநிகழ்த்திய சஜித் பிரேமதாஸ, யுத்தத்தை களத்தில் நின்று போராடி வெற்றிகண்டவர்களுக்கே நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உயர்பதவிகளை வழங்க வேண்டும் என்றும், தான் அமைக்கின்ற புதிய ஆட்சியில் தேசிய பாதுகாப்பு குறித்த பொறுப்பை உண்மையான யுத்தவீரரான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவிடம் ஒப்படைப்பேன் என்று குறிப்பிட்டார். 

அதன்போது மேடையிலிருந்து எழுந்துவந்து மக்களை நோக்கி கையசைத்த பொன்சேகா, அடுத்ததாகப் பேசும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். 

ஐக்கிய தேசியக் கட்சி உயர்ந்தபட்ச ஜனநாயகத்தன்மை வாய்ந்த கட்சியாகும். கொள்கை அடிப்படையில் எமக்கிடையே சிறு முரண்பாடுகள் காணப்பட்டன. ஆனால் இறுதியில் எமக்கிடையில் கலந்துரையாடி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தோம். அதிலிருந்து எமக்கு எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் சஜித் பிரேமதாஸவையும், மக்களாகிய உங்களையும் நிச்சயமாக வெற்றிபெறச் செய்வோம் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08