(எம்.மனோசித்ரா)
தெற்காசியாவில் மாத்திரமன்றி உலகிலேயே கட்சியொன்று தோற்றம் பெற்ற குறுகிய காலத்தில் இந்தளவிற்கு பிரசித்தி பெற்றிக்க முடியாது என்று பொதுஜன பெரமுனவின் ஸ்தாபர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சுதந்திர கட்சி - பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய பசில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், சுதந்திர கட்சியின் ஆலோசகர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன். அவர்கள் இருவரும் இந்த தீர்மானத்தில் உறுதியாக இருந்திராவிட்டால் இன்று இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைந்திருக்க முடியாது.
இதுவரையில் எந்த தரப்புடனும் இணையாத நாம் எவ்வாறு சுதந்திர கட்சியுடன் இணைந்தோம் என்று பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் சிலர் எம்மிடம் கேள்வியெழுப்பினர். எமது தனிப்பட்ட கொள்ளைகளை ஒதுக்கி நாட்டையும் மக்களையும் ஒன்றிணைப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு என்பதை அவ்வாறு கேள்வியெழுப்புபவர்களிடம் தெரிவிக்க விரும்புகின்றேன்.
தெற்காசியாவில் மாத்திரமின்றி உலகிலேயே பொதுஜன பெரமுன போன்று தோற்றம் பெற்று மிகக் குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்த வேறு கட்சிகள் கிடையாது. அதே போன்று முதல் முறையாக முகங்கொடுத்த உள்ளுராட்சி தேர்தலிலும் வெற்றி பெற்றுக் காண்பித்தோம். இவ்வாறு எமது வெற்றிக்காக மக்களே வழிகாட்டினர் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM