(செ.தேன்மொழி)
பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபேசேகர சாந்த சிசிர குமார கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டு சிலாபம் நகரில் சட்டவிரோதமாக கூடி துப்பாக்கி வைத்திருந்தமை தொடர்பாக சிலாபம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், பிரதி ஞாயிற்றுக்கிழமை தோரும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.
2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வாராந்தம் கையொப்பமிடவேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு, மாதாந்தத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால் சந்தேக நபர் நிபந்தனையை மீறியிருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற் கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து சந்தேக நபர் இன்று சிலாபம் மேல் நீதிமன்றத்தில் ஆஜரபடுத்தப்பட்டார். இதன்போது நீதவான் அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM