இந்தோனேசியாவின் உயர் பாதுகாப்பு அமைச்சர் விரான்டோ ஐஎஸ் ஆதரவாளர்கள் என கருதப்படுபவர்களால் கத்திக்குத்திக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் ஜாவாவின் பன்டெக்லாங்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயர் பாதுகாப்பு அமைச்சர் விரான்டோ அவரது வாகனத்திற்கு அருகில் வைத்து கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தையும் அமைச்சர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் சந்தேகநபர் ஒருவருடன் மல்லுக்கட்டுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.
அமைச்சருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது, காவல்துறை உத்தியோகத்தர் , இராணுவவீரர் உட்பட வேறு சிலரும் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் தம்பதியினரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து ஆயுதங்களை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியில் பல்கலைகழகமொன்றை திறந்துவைப்பதற்காக சென்ற அமைச்சர் அங்கிருந்தவர்களுடன் கைகுலுக்கி உரையாடிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நபர் ஒருவர்மீதே காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவருடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணை விசாரணை செய்துவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM