உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிர்ச்சி அறிக்கை
உலகில் 2.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வைக் குறைபாடு அல்லது குருட்டுத் தன்மையுடன் வாழ்வதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பார்வை தொடர்பான உலக அறிக்கை தெரிவிக்கிறது.
கண் பார்வை குறித்து இத்தகைய அறிக்கையொன்று வெளியிடப்படுவது இதுவே முதல் தடவையாகும். கண்புரை நோய்க்கான அறுவைச் சிகிச்சை மூலம் ஒரே இரவில் தமது பார்வையை சீர்செய்யக்கூடிய வாய்ப்பிருந்தும் உலகில் சுமார் 65 மில்லியன் மக்கள் பார்வைக் குறைபாடு மற்றும் குருட்டுத்தன்மையுடன் வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரொஸ் அடனொம் கிபிறியெஸஸ் தன்னால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கண் பார்வை தொடர்பான மருத்துவக் கவனிப்புத் தேவையானவர்கள் நிதி தொடர்பான கஷ்டங்களுக்கு உள்ளாகாதவாறு தரமான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அந்த வகையில் அனைத்து நாடுகளும் தேசிய சுகாதார கவனிப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக கண் பார்வை தொடர்பான கவனிப்பை உள்ளடக்குவது அவசியமாகவுள்ளது என ரெட்ரொஸ் தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் பெருமளவு மக்கள் கண்ணுக்குள் ஒளியின் விலகலை சீர்செய்யத் தவறுதல், கண்புரை நோய் மற்றும் குறும்பார்வை, நீரிழிவு, பார்வைக் குறைபாட்டை தாமதமாக கண்டறிதல் உள்ளடங்கலான ஏனைய காரணங்களால் பார்வைக் குறைபாடுடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கண்ணுக்குள் ஒளியின் விலகலை சீர்செய்யத் தவறியமையால் 124 மில்லியன் பேரும் கண்புரை நோயால் 65 மில்லியன் பேரும் பார்வைக் குறைபாட்டுடன் வாழ்கின்றனர். அத்துடன் சுமார் 900 மில்லியன் பேர் வயதாதலுடன் தொடர்புபட்ட வெள்ளெழுத்து பாதிப்பு மற்றும் கண் அழுத்த நோய் (குளுக்கோமா) பாதிக்கப்பட்ட நிலையில் சிகி ச்சை பெறாது வாழ்கின்றனர்.
கண் பார்வைக் குறைபாடு உலகளா விய ரீதியில் சமமான முறையில் பாதி ப்பை ஏற்படுத்தவில்லை எனவும் அது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உழைக்கும் நாடுகள், பெண்கள், குடியே ற்றவாசிகள், பூர்வீக குடிகள், குறிப்பிட்ட உடல் குறைபாடுகளைக் கொண்டவர்கள் மற்றும் கிராமப் பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களைப் பெரிதும் பாதிப்பதாக உள்ளது எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் மேற்படி அறிக்கை கூறுகிறது.
அதிக வருமானம் பெறும் பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்க சஹாரா, தெற்கு ஆசிய பிராந்தியங்களை பார்வைக் குறைபாடு 8 மடங்கு அதிகமாக பாதித்துள்ளதாக இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM