ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் தமது கடன்களை செலுத்தத் தவறினால் அந்த சபைக்கு எதிர்வரும் மாதத்தில் தனது உத்தியோகத்தர்களுக்கான ஊதியங்களை வழங்கப்போதுமான பணம் இல்லாது போய்விடும் நிலை தோன்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை நிதி தொடர்பில் திண்டாட்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
அவர் செவ்வாய்க்கிழமை 193 அங்கத் துவ நாடுகளைக்கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வரவு–செலவுத் திட்ட சபை முன்பாக இந்த உரையை ஆற்றியிருந்தார். தான் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலவினத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்திராவிடில் கடந்த மாதம் இடம்பெற்ற வருடாந்த உலகத் தலைவர்களின் கூட்டத்திற்குத் தேவையான நிதியில்லாது போயிருக்கும் என அவர் கூறினார்.
இந்த மாதம் கடந்த ஒரு தசாப்த காலத்தில் ஒருபோதும் எதிர்கொள்ளாத வகையிலான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் போதிய பணமின்றி நவம்பர் மாதத்தில் காலடியெடுத்து வைக்கும் அபாயத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம். இதனால் எமது பணிகளும் எமது சீர்திருத்தங்களும் இடர்பாட்டிலுள்ளன என அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான 3.3 பில்லியன் டொலருக்கும் அதிகமான வழமையான வரவுசெலவுத் திட்டத்தில் 22 சதவீதத்திற்கு பங்களிப்பு செய்வதற்கு அமெரிக்கா பொறுப்பாகவுள்ளது.
அந்த நிதி அரசியல், மனிதாபிமான, பொருளாதார, சமூக மற்றும் தொடர்பாடல் உள்ளடங்கலான பணிகளுக்காக செலுத்தப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா இதற்கு முந்திய வழமையான வரவு செலவுத் திட்டங்களுக்காக சுமார் 381 மில்லியன் டொலரையும் இந்த ஆண்டுக்கான வழமையான வரவு செலவுத் திட்டத்திற்காக 674 மில்லியனையும் கடன்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி கடன் தொகைகள் குறித்து ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியிருந்தபோதும் அந்தக் கடன்கள் எப்போது செலுத்தப்படும் என்பது தொடர்பில் விமர்சனம் எதனையும் வெளியிடவில்லை. அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அதனது நீதியற்ற செலவின சுமை க்கு தோள்கொடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் குட்டரெஸ் ஐக்கிய நாடு கள் சபையின் செயற்பாடுகளை மேம்படுத் தவும் செலவினத்தைக் குறைக்கவும் போராடி வருகிறார். நிதிப்பற்றாக்குறை காரணமாக வெற்றிடமான பதவிகள் நிரப்பப்படாதுள்ள அதேசமயம் அத்தியாவசியமான போக்குவரத்துகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சபையின் சில கூட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டுள் ளன.
இந்த நிதிப் பற்றாக்குறையால் நியூயோர்க், ஜெனிவா, வியன்னா மற்றும் நைரோபியிலும் ஏனைய பிராந்தியங்களிலுமான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் பாதி ப்பை எதிர்கொண்டுள்ளன.
எனினும் ஐக்கிய நாடுகள் சமாதானப் படையினரின் செயற்கிரமத்திற்கு வேறான வரவு செலவுத் திட்டமொன்றின் மூலம் நிதிவசதியளிக்கப்பட்டு வருகிறது. அமெரி க்கா சமாதானப் படையினரின் செயற்கிர மத்துக்காக தற்போது சுமார் 2.4 பில்லியன் டொலர் பெறுமதியான தொகையை கடன் பட்டுள்ளது.
அதேசமயம் எதியோப்பியா, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் ருவண்டா ஆகிய நாடுகள் சமாதானப் படையில் அங் கம் வகிக்கும் தமது படையினருக்கு தமது தேசிய சம்பள மட்டத்திற்கு அமைவாக ஊதியத்தை வழங்கி வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM