கடந்த 5 வருடங்களாக மலையக அபிவிருத்திக்கு 'தனியான அதிகார சபை' தேவை என்று பரிந்துரை செய்யப்பட்டு வந்துள்ளது. அதற்கு அமைய 'மலையக அபிவிருத்தி அதிகார சபை' தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்சியால் அமைச்சரவை அங்கீகாரத்துடன் கிடைத்துள்ளது. அதன் செயற்பாடுகள் எத்தகையது என்பது பற்றி மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டியது அவசியமாகும் என 'பிரிடோ' நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஆர் ஜோக்கிம் தெரிவித்தார்.
பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் பணிகளை மீளவும் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று அட்டன் 'டைன் என் ரெஸ்ட்' விருந்தகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. பிரிடோ நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கே. சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொது அமைப்புகள் முதலானவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 100 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது சமூகம் கொடுத்து வந்த அழுத்தம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், பிரதேச செயலகங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது எமக்குக் கிடைத்துள்ள வெற்றிதான் என்றாலும், ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் அவற்றுக்குரிய கட்டிடங்கள் கிடைக்கவில்லை. தேவையான உத்தியோகத்தர்களும் நியமிக்கப்படவில்லை. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் இன்னும் வெளியிடப்படவில்லை.
பிரதேச சபையின் சேவைகளை தோட்ட மக்கள் பெற்றுக்கொள்ள முடியாத வகை யில் அதன் சட்டத்தில் சில சரத்துகள் அமைந்துள்ளன. பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டு 30 வருடங்களுக்கு மேலாகியும் தோட்ட மக்கள் அதன் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது என்பதை சுட்டிக்காட்டி பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் சேவைகளை இனிமேல் தோட்டங்களுக்கு விஸ்தரிக்கலாம் என்று கூறப்படுகின்ற போதிலும், அதில் நீக்கப்பட்ட விடயம், உள்வாங்கப்பட்ட விடயம் என்ன என்பது அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தெரியாமல் உள்ளது. உத்தியோகத்தர்களுக்கே தெரியாத நேரத்தில், சாதாரண மக்களுக்கு எவ்வாறு தெரியும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதன் சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பான பயிற்சிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அதேபோல், மலையக அபிவிருத்திக்காக தனியான அதிகார சபை உருவாக்கப்பட்டுள்ளது. அரச வளத்தை எமது மக்களுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய அறிவையும் தெளிவையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இதில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பெரும் பங்கு இருக் கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM