“மலை­யக அபி­வி­ருத்தி அதி­கார சபையின் செயற்­பா­டுகள் மக்களிடத்தில் செல்ல வேண்டும்”

Published By: R. Kalaichelvan

10 Oct, 2019 | 11:08 AM
image

கடந்த 5 வரு­டங்­க­ளாக மலை­யக அபி­வி­ருத்­திக்கு 'தனி­யான அதி­கார சபை' தேவை என்று பரிந்­துரை செய்­யப்­பட்டு வந்­துள்­ளது. அதற்கு அமைய 'மலை­யக அபி­வி­ருத்தி அதி­கார சபை' தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் முயற்­சியால் அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்­துடன் கிடைத்­துள்­ளது. அதன் செயற்­பா­டுகள் எத்­த­கை­யது என்­பது பற்றி மக்கள் மத்­தியில் கொண்டு செல்­லப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என 'பிரிடோ' நிறு­வ­னத்தின் தலைவர் மைக்கல் ஆர் ஜோக்கிம் தெரி­வித்தார்.

பெருந்­தோட்ட சமூக மாமன்­றத்தின் பணி­களை மீளவும் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தும் கலந்­து­ரை­யாடல் கூட்டம் ஒன்று அட்டன் 'டைன் என் ரெஸ்ட்' விருந்­த­கத்தில் கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்­றது. பிரிடோ நிறு­வ­னத்தின் திட்­ட­மிடல் பணிப்­பாளர் எஸ்.கே. சந்­தி­ர­சே­கரன் தலை­மையில் இடம்­பெற்ற மேற்­படி கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். தொழிற்­சங்­கங்கள், அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், பொது அமைப்­புகள் முத­லா­ன­வற்றை பிர­தி­நி­தித்­துவப்படுத்தி சுமார் 100 பேர் கலந்து கொண்ட இந்­நி­கழ்வில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

எமது சமூகம் கொடுத்து வந்த அழுத்தம் கார­ண­மாக நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பிர­தேச சபைகள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அதேபோல், பிர­தேச செய­ல­கங்­களும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இது எமக்குக் கிடைத்­துள்ள வெற்­றிதான் என்­றாலும்,  ஒரு வரு­டத்­துக்கு மேலா­கியும் இன்னும் அவற்­றுக்­கு­ரிய கட்­டி­டங்கள் கிடைக்­க­வில்லை. தேவை­யான உத்­தி­யோ­கத்­தர்­களும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. அது தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தலும் இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

பிர­தேச சபையின் சேவை­களை தோட்ட மக்கள் பெற்றுக்கொள்ள முடி­யாத வகை யில் அதன் சட்­டத்தில் சில சர­த்துகள்   அமைந்­துள்­ளன. பிர­தேச சபைகள் உரு­வாக்­கப்­பட்டு 30 வரு­டங்­க­ளுக்கு மேலா­கியும் தோட்ட மக்கள் அதன் பயன்­களைப் பெற்றுக்கொள்ள முடி­யா­துள்­ளது என்­பதை சுட்டிக்காட்டி பிர­தேச சபை சட்­டத்தில் திருத்தம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. அதன் சேவை­களை இனிமேல் தோட்­டங்­க­ளுக்கு விஸ்­த­ரிக்­கலாம் என்று கூறப்­ப­டு­கின்ற போதிலும், அதில் நீக்­கப்­பட்ட விடயம், உள்­வாங்­கப்­பட்ட விடயம் என்ன என்­பது அங்கு கட­மை­யாற்றும் உத்­தி­யோ­க­த்தர்­க­ளுக்கு தெரி­யாமல் உள்­ளது. உத்­தி­யோ­கத்தர்­க­ளுக்கே தெரி­யாத நேரத்தில், சாதா­ரண மக்­க­ளுக்கு எவ்­வாறு தெரியும் என்று சிந்­தித்துப் பார்க்க வேண்டும். அதன் சேவையை எவ்­வாறு பெற்றுக் கொள்­வது என்­பது தொடர்­பான பயிற்­சிகள் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும்.

அதேபோல், மலை­யக அபி­வி­ருத்­திக்­காக தனியான அதிகார சபை உருவாக்கப்பட்டுள்ளது. அரச வளத்தை எமது மக்களுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய அறிவையும் தெளிவையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இதில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பெரும் பங்கு இருக் கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50