இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியானது இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நிகழ்வுகளும் இதன்போது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி இப் போட்டி இடம்பெறும் லாகூரிலுள்ள காடபி கிரிக்கெட் மைதானமானது இளஞ்சிவப்பு நிறத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போட்டி ஆரம்பமாகுவதற்கு முன்னர் மார்பக புற்றுநோய் தொடர்பான நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளது.
இதில் பாகிஸ்தான் நாட்டு ஜனாதிபதி டாக்டர் ஆரிப் அல்வி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் எஹ்சன் மணி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் இப் போட்டியில் கலந்துகொள்ளும் இரு அணி வீரர்களும் கையில் இளம்சிவப்பு நிறத்திலான பட்டிகளை கட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளையாடவுள்ளனர்.
இதேவேளை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகமானது போட்டியைக் காணவரும் ரசிகர்களை இளஞ்சிவப்பு நிற உடை அணியுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM