உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு ; கணவன் தலைமறைவு !

Published By: Digital Desk 3

09 Oct, 2019 | 02:27 PM
image

நீர்கொழும்பு பகுதியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து நீர்கொழும்பு, தளுபத்தை பல்லன்சேனை வீதியில் பிரான்சிஸ் சாலிஸ் மாவத்தையில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே குறித்த பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் மீட்கப்பட்ட வீட்டிற்கருகில் வசிப்பவர்கள் துர்நாற்றம் வீசுவதாகப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமையவே, குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் விட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டின் அறை ஒன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் திருமணமானவரெனவும் குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், கணவனை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் குறித்த தம்பதியினர் குறித்த வீட்டுக்கு வாடகைக்கு வந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28