(இராஜதுரை ஹஷான்)
தனி பௌத்த சிங்கள வாக்குகளை மாத்திரம் பெற்றுத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கம் பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. தமது சுய நலனுக்காகத் தமிழ் மக்களை பகடைக்காயாகக் கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் உடன்பட முடியாது எனப் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அனைத்து இன மக்களின் ஆதரவினையும் பெற்றே நாட்டுத் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும். தனி பௌத்த சிங்கள வாக்குகளை மாத்திரம் பெற எதிரணியினர் முயற்சிப்பதாக ஆளும் தரப்பினர் தமிழ் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றது.
2015ஆம் ஆண்டு தமிழ் மக்களின் மத்தியில் கடந்த அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தவறான சித்தரிப்புக்களையே முன்னெடுத்தது.இதுவே ஆட்சி மாற்றத்திற்கான பிரதான காரணியாக அமைந்தது. தமிழ் மக்களுக்கு பல்வேறு வாக்குகளை வழங்கிய அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக எதனையும் நிறைவேற்றவில்லை.
வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வும், மலையக மக்களுக்கு நியாயமான சம்பளமும், உட்கட்டமைப்பு விருத்தியும் செய்வதாகக் குறிப்பிடப்பட்டது. அரசியல் தீர்வு வடக்கு மக்களின் தேவையாகக் காணப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவையாகக் காணப்பட்டது. அபிவிருத்தி தொடர்பில் கருத்துரைத்தால், அரசியல் தீர்வு செயலிழக்கப்படும் என்பதே கூட்டமைப்பின் கருத்தாகக் காணப்பட்டது. ஆகையால் அவர்கள் வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை.
அரசியல் தீர்வு இனங்களுக்கிடையில் மீண்டும் பிளவினையே ஏற்படுத்தும். தமிழ் மக்களை பகடைக்காயாகக் கொண்டு தமிழ் தலைவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் பொருத்தமற்றது. எனவே தமிழ் மக்களின் ஆதரவினை மாத்திரம் கோருகின்றோம்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பினர் உட்படத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எவரும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் செலுத்தவில்லை. ஆகவே தமிழ் மக்கள் இம்முறை அரசியல் ரீதியில் தனித்த தீர்மானங்களையே முன்னெடுக்க வேண்டும். போலியான அரசியல் பிரச்சாரத்திற்கு ஏமாற வேண்டாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM