தமிழ் தலைவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் பொருத்தமற்றது - செஹான் சேமசிங்க 

Published By: Daya

08 Oct, 2019 | 04:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தனி பௌத்த சிங்கள வாக்குகளை மாத்திரம் பெற்றுத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கம் பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. தமது சுய நலனுக்காகத் தமிழ் மக்களை பகடைக்காயாகக் கொண்டு  தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் உடன்பட முடியாது எனப் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அனைத்து இன மக்களின் ஆதரவினையும் பெற்றே நாட்டுத் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும். தனி பௌத்த சிங்கள வாக்குகளை மாத்திரம் பெற எதிரணியினர் முயற்சிப்பதாக ஆளும் தரப்பினர் தமிழ் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றது.

2015ஆம் ஆண்டு  தமிழ் மக்களின் மத்தியில் கடந்த அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தவறான சித்தரிப்புக்களையே முன்னெடுத்தது.இதுவே ஆட்சி மாற்றத்திற்கான பிரதான காரணியாக அமைந்தது.  தமிழ் மக்களுக்கு பல்வேறு  வாக்குகளை வழங்கிய அரசாங்கம்  கடந்த  ஐந்து ஆண்டுகளாக எதனையும் நிறைவேற்றவில்லை.

வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வும், மலையக மக்களுக்கு நியாயமான சம்பளமும், உட்கட்டமைப்பு விருத்தியும்  செய்வதாகக் குறிப்பிடப்பட்டது.  அரசியல் தீர்வு   வடக்கு மக்களின் தேவையாகக் காணப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவையாகக் காணப்பட்டது. அபிவிருத்தி தொடர்பில் கருத்துரைத்தால், அரசியல் தீர்வு செயலிழக்கப்படும் என்பதே  கூட்டமைப்பின் கருத்தாகக் காணப்பட்டது. ஆகையால் அவர்கள் வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை.

அரசியல் தீர்வு   இனங்களுக்கிடையில் மீண்டும் பிளவினையே  ஏற்படுத்தும்.   தமிழ் மக்களை  பகடைக்காயாகக் கொண்டு தமிழ் தலைவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் பொருத்தமற்றது. எனவே தமிழ் மக்களின் ஆதரவினை மாத்திரம் கோருகின்றோம்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பினர் உட்படத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எவரும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் செலுத்தவில்லை. ஆகவே தமிழ் மக்கள் இம்முறை அரசியல் ரீதியில் தனித்த தீர்மானங்களையே முன்னெடுக்க  வேண்டும். போலியான அரசியல் பிரச்சாரத்திற்கு ஏமாற வேண்டாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்...

2025-02-13 13:58:06
news-image

ரிதியாகம பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர்சூட்டப்பட்டது

2025-02-13 13:29:21
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-13 12:54:39
news-image

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பிரதமர்...

2025-02-13 13:46:35
news-image

நாடு கடத்தப்பட்டார் இந்தியாவில் தலைமறைவாகியிருந்த சுமித்...

2025-02-13 13:43:14
news-image

ஒருவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதன் அர்த்தத்தை...

2025-02-13 12:54:27
news-image

யாழில் 13 வயதான மகளை அடித்து...

2025-02-13 12:40:57
news-image

பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள்...

2025-02-13 12:54:13
news-image

காதலர் தினம் என்ற போர்வையில் இடம்பெறும்...

2025-02-13 12:02:24
news-image

உலர்ந்த கருவாடு, இஞ்சியுடன் சந்தேநபர்கள் மூவர்...

2025-02-13 12:52:28
news-image

பொருளாதார, முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்த ஐக்கிய...

2025-02-13 11:52:27
news-image

“இதுதான் நீங்கள் வழங்கும் நீதியா? தேசிய...

2025-02-13 11:04:31