புத்தளத்தில் வெடிப்புச் சம்பவம் ; மக்கள் மத்தியில் அச்சம்

Published By: R. Kalaichelvan

08 Oct, 2019 | 12:58 PM
image

கொழும்பிலுள்ள குப்பைகளை கொட்டுவதற்காக புத்தளம் அருவாக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தையடுத்து மக்கள் மத்தியில் அச்சநிலையேற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த வெடிப்புச் சம்பவம் நேற்றிரவு 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாரிய வெடிப்புச் சத்தத்தையடுத்து அப்பகுதியில் தீச் சுவாலை ஏற்பட்டதாகவும் இதன்போது நிலங்கள் வீடுகள் அதிர்வடைந்ததாகவும் அப்பகுதியில்  வாழும் மக்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக வெடிப்புச் சம்பவத்தையடுத்து அருவாக்காட்டை அண்டிய சேரக்குளி, கரைத்தீவு, கங்கைவாடி, எலுவாங்குளம் பிரதேசங்களில் வாழும் மக்கள் அதிர்வை உணர்ந்ததாக தெரிவிக்கின்றனர். 

இதனால் நேற்று இரவு 9.15 மணியளவில் இருந்து சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. 

இதையடுத்து தாம் அச்சத்தில் உறங்கவில்லையென மக்கள் தெரிவித்தனர். பாரிய சத்தம் ஏற்பட்டதன் அச்சத்தின் காரணமாக வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் அப்பகுதி மக்கள் முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர்.

 இதேவேளை கொழும்பிலிருந்து புத்தளம் அருவக்காட்டிற்கு குப்பைகளை ஏற்றிக் கொண்டு வருகைத் தந்து கொண்டிருந்த டிப்பர் வாகனங்கள் சம்பவத்தையடுத்து கட்டுநாயக்க பகுதியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டதாக வண்ணாத்திவில்லு பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40