போதை மாத்திரையுடன் பாடசாலை மாணவன் கைது 

Published By: Digital Desk 4

07 Oct, 2019 | 04:10 PM
image

போதை மாத்திரையுடன் பாடசாலை மாணவன் விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை(5) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வைத்து மருதமுனையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரம் கலைப்பிரிவில் கல்விப்பயிலும் அப்துல் ரசாபீ முகம்மட் அஷ்லம் (வயது-18) என்ற மாணவனே இவ்வாறு கைதானார்.

 மருதமுனை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த மாணவன்  கைது செய்யப்பட்டு  கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் கைதான  மாணவனிடமிருந்து 1050 ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்  கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மாணவனை  எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதியில்  பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகளவான போதை பாவனை காணப்படுவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55