வெள்ள அனர்த்தம் தீவிரம் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Published By: Raam

20 May, 2016 | 08:32 AM
image

சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் ஏற்­பட்ட அனர்த்த நிலை­மைகள் தொடர்­பாக மக்கள் பிர­தி­நி­திகள் கவனம் செலுத்த வேண்­டி­யதன் கார­ண­மாக நேற்று வியா­ழக்­கி­ழமை சபை நட­வ­டிக்­கைகள் நண்­பகல் 12.10 மணி­யுடன் ஒத்தி வைக்­கப்­பட்­டன.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நிதி அமைச்சு தொடர்­பான பிரே­ர­ணையை முன்­வைத்து நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க உரை­யாற்­றினார்.

அதனைத் தொடர்ந்து பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதித் தலை­வரும் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் அப்­பி­ரே­ரணை மீதான உரையை ஆற்றிக் கொண்­டி­ருந்த தரு­ணத்தில் எழுந்த நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க நாட­ளா­விய ரீதியில் சீரற்ற கால­நி­லையால் பல அனர்த்­தங்கள் ஏற்­பட்­டுள்­ளன.

இதனால் மக்கள் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர். கொழும்பு மாநகர், கடு­வெல, கொலன்­னாவை போன்ற பகு­தி­க­ளிலும் வெள்ள அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ளது. மக்கள் தமது பிர­தி­நி­தி­களை எதிர்­பார்த்­துள்­ளனர்.

இதனால் மக்கள் பிர­தி­நி­திகள் தமது தொகு­தி­க­ளுக்குச் செல்ல வேண்­டி­யுள்­ளது. ஆகவே, சபையை வேளை­யோடு ஒத்­தி­வைக்­கு­மாறு கோரிக்கை விடுக்­கி றேன் என்றார். அதன்போது சபா­நா­யகர் கரு ­ஜ­ய­சூ­ரிய ஏனைய உறுப்­பி­னர்கள் உரை­யாற்ற வேண்­டி­யுள்­ளது. அத்தோடு கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் ஆராய்ந்து முடி­வெ­டுப்போம் என்றார்.

எனினும் செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி., அமைச்சர் சரத்­பொன்­சேகா, பந்­து­ல­கு­ண­வர்த்­தன எம்.பி. ஆகியோர் உரை­யாற்­றிய பின்னர் சபையை ஒத்­தி­வைக்­கு­மாறு மீண்டும் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க கோரினார்.

அத்­துடன் ஏனைய உறுப்­பி­னர்­க­ளையும் குறித்த விட­யத்தைக் கூறி சபையை ஒத்­தி­வைப்­ப­தற்­கான அனு­ம­தியைக் கோரினார். இத­னை­ய­டுத்து பந்­துல குண­வர்த்­தன எம்.பி., நாமல் ராஜபக் ஷ எம்.பி. ஆகியோர் தாம் சபையை ஒத்­தி­வைப்­ப­தற்கு இணங்­கு­வ­தாக கூறினார்கள்.

இந்நிலையில் செல்வம் அடைக்கலநா தன் எம்.பி., அமைச்சர் சரத் பொன்சேகா ஆகியோரின் உரைகளின் நிறைவுக்குப் பின்னர் 12.10 க்கு சபையை ஒத்திவைப்ப தாக சபாநாயகர் அறிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 19:54:35
news-image

மூதூரில் டிப்பர் வாகனத்தில் கட்டாக்காலி மாடு...

2026-02-17 17:01:19
news-image

இலங்கை மற்றும் ஜப்பான் இடையே பொருளாதார...

2026-02-17 16:44:37