சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை இந்திய அணியின் முகாமைத்துவம் நடத்தியுள்ள விதம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம் அந்த அணியில் அஸ்வின் இடம்பெறவேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அஸ்வின் நிச்சயமாக இடம்பெறவேண்டிய வீரர் ஆனால் அணி முகாமைத்துவம் அஸ்வினை உரிய முறையில் நடத்தாதன் காரணமாக அவர் சிறப்பாக பந்து வீசுவதற்கு சிறிது சிரமப்படுகின்றார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தன்னை சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கை உள்ளது என அஸ்வின் உணரும் நிலையை ஏற்படுத்தவேண்டும்,என தெரிவித்துள்ள சுனில்கவாஸ்கர் நீங்கள் தொடர்ந்தும் புறக்கணி;க்கப்பட்டால் நீங்கள் உங்களை நிருபிப்பதற்காக மேலும் முயற்சி செய்யவேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும்போதெல்லாம் அஸ்வினை ஏனையவர்களுடன் ஒப்பிடுவது வழமையாகிவிட்டது என கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஒப்பீடுகளால் அவர் பாதிக்கப்படுகின்றார்,அவுஸ்திரேலியாவில் விளையாடும்போது நேதன் லயனுடன் அவரை ஒப்பிடுகின்றனர்,இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடும்போது அஸ்வினை மொயின் அலியுடன் ஒப்பிடுகின்றனர் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
350 டெஸ்ட் விக்கெட்களிற்கு மேல் வீழ்த்தியவரை தொடர்ச்சியாக புறக்கணிக்க முடியாது,இதற்கு கிரிக்கெட்டிற்கு அப்பால்பட்ட காரணங்கள் இருக்கவேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM