ஹொங்கொங்கில் பொலிஸார் மீது தீ வைத்த போராட்டக்காரர்கள் (காணொளி இணைப்பு)

Published By: Digital Desk 4

05 Oct, 2019 | 03:07 PM
image

ஹொங்கொங்கில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஹாங்காங்கில் விடிய விடிய போராட்டம்: போலீஸ் மீது தீ வைத்த போராட்டக்காரர்கள் - வீடியோ

ஹொங்கொங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை செய்யும் விதமாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து மசோதா கைவிடப்பட்டது. ஆனாலும், ஹொங்கொங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்துதல், சுதந்திரமாக தேர்தல், போராட்டக்காரர்களை தாக்கிய பொலிஸார் மீது விசாரணை மேற்கொள்ளுதல், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போராட்டக்காரர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்தல் போன்ற கோரிக்கைகளுடன் நான்கு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் தங்கள் அடையாளங்களை பொலிஸார் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக முகங்களில் முகமூடி அணிந்துகொண்டு போராடி வருகின்றனர். 

இதற்கிடையில், ஹொங்கொங்கில் முகமூடி அணிந்து போராடுவதை தடைவிதிக்கும் வகையில் அவசர சட்டதை நகர தலைமை நிர்வாகி நேற்று அமுல்படுத்தினார். 

இந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று இரவு முழுவதும் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் சீனாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக செயற்பட்டுவந்த கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தையையும் அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர். 

பின்னர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினர். இதையடுத்து ஹொங்கொங்கில் ரயில் சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 

இந்நிலையில், சாலையில் திரண்ட போராட்டக்காரர்கள் கார் ஒன்றை நிறுத்தி அதில் பயணித்த சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை திடீரென தாக்கினர். மேலும், அவரை தீயிட்டு கொளுத்தவும் முற்பட்டனர். 

இதில் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய பொலிஸ் அதிகாரி போராட்டக்காரர்களை நோக்கி தனது துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 14-வயது நிரம்பிய சிறுவன் படுகாயமடைந்ததாகவும் அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47