பாரிசில் பொலிஸ் தலைமையகத்தில் கத்திக்குத்து- நால்வரை கொலை செய்த நபர் சுட்டுக்கொலை

Published By: Rajeeban

03 Oct, 2019 | 10:13 PM
image

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் காவல்துறை தலைமையகத்தில் பணியாளர் ஒருவர் சக பணியாளர்கள் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

காவல்துறை தலைமையகத்தின் தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகியாக பணியாற்றிய 45 வயது நபர் தனது சக பணியாளர் ஒருவரை கத்தியால் குத்திய பின்னர் ஏனையவர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக மூன்று ஆண்கள் பெண் ஒருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளார்.

காவல்துறை தலைமையகத்தின் படிக்கட்டில் அந்த நபர் இரண்டு; ஆண்களையும் மூன்று பெண்களையும் கத்தியால் தாக்கியதை தொடர்ந்து காவல்துறையினர் அவரை சுட்டுக்கொன்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கொலைகளை உறுதிசெய்துள்ள உள்துறை அமைச்சர் கிறிஸ்டொபர் கஸ்டெனர் தாக்குதலை மேற்கொண்ட நபர் தனது சக பணியாளர்களுடன் பணியாற்றியவேளை எந்த ஆபத்தான குணாதிசயங்களையும் வெளிப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட கொலைகளிற்கான காரணத்தினை பகிரங்கப்படுத்தாத காவல்துறையினர் சந்தேகநபரின் வீட்டில் சோதனைகள் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

கொல்லப்பட்ட நால்வரும் காவல்துறை உத்தியோகத்தர்கள் காவல்துறை தலைமையகத்தில் குழப்பமும் அச்சமும் காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தை பார்த்த சக பணியாளர்களால் தங்கள் வாழ்நாள் முழுவதும் இதனை மறக்க முடியாது என ஒருவர் தெரிவித்துள்ளார்.

நான் படிகளில் இருந்தவேளை துப்பாக்கி சத்தம் கேட்டது நான் இது வழமைக்கு மாறான விடயம் என நினைத்தேன்  அதன் பின்னர் மூன்று காவல்துறை அதிகாரிகளும் ஏனையவர்களும் அதிகாரிகளும் அழுதுகொண்டிருப்பதை பார்த்தேன் என காவல்துறை தலைமையக பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதலில் காவல்துறை அதிகாரியொருவர் தற்கொலை செய்துகொண்டார் என நினைத்தேன்,அதன் பின்னர் யாரோ அதிகாரிகளை கொலைசெய்துள்ளதை அறிந்தேன்,அந்த நபரை கொலை செய்த அதிகாரியும் அழுதுகொண்டிருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களிற்காகவே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஊடகங்கள் அதேவேளை பயங்கரவாத விசாரணை பிரிவினரும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13