தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்து வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

03 Oct, 2019 | 05:08 PM
image

வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக போராடிவரும் நிலையில் அவர்களுக்கு நியமனம்  தொடர்பாக தீர்வுதராத நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை அளிக்காது புறக்கணிக்க போவதாக தெரிவித்து. மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் நேற்று (02.09.2019) வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் உட்பட  நூற்றுக்கணக்காண வேலையில்லா பட்டதாரிகள் கலந்து கொண்டனர். 

இதன்போது அரச நியமனம் கோரி கடந்த 2015 தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உண்ணாவிரதம் மற்றும் வீதியோரப் போராட்டங்களை மேற்கொண்டு வந்தோம் ஆனால் இதுவரைக்கும் எமக்கு ஒழுங்கான நியமனங்கள் கிடைக்கவில்லை. 

2019 ஆம் ஆண்டு வரைக்கும் இதுவரை பட்டதாரிகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு அந்தந்த ஆண்டு நியமனங்களை வழங்கியிருந்தால் இவ்வாறு வேலையில்லா பட்டதாரிகள் அதிகரித்திருக்க முடியாது.

 எனவே இந்த அரசாங்கம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எங்களுக்கான அரச நியமனங்களை தரவேண்டும் அல்லது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கட்சிகள் எமது இந்த கோரிக்கைக்கு எழுத்து மூலமான உத்தரவாதத்தை வழங்க முன்வருவோக்கு நாங்கள் எமது வாக்குகளை வழங்குவோம் .

இந்த கோரிக்கையை எந்த கட்சியும் ஏற்காவிடில் நாங்கள் ஜனாதிபதி தேர்தல் மட்டுமல்ல எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் உட்பட அனைத்து தெர்தலையும் புறக்கணிப்போம் நாடளாவிய ரீதியில் 25 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளதுடன் சுமார்  ஒரு இலச்சத்துக்கு  மேற்பட்ட வாக்குகளை புறக்கணிக்க நேரிடும் என தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04