ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக் ஷ தனக்குரிய ஓய்வூதியத்தையும் பெற்றுக்கொள்கிறார்.
அதேவேளை பாராளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தையும் பெற்றுக் கொள்கிறார். மாதாந்த வருமானமாக 4,54,000 ரூபாவை பெறுவது எந்தவிதத்தில் நியாயம்? இவ்வாறு சாதாரண நபர் ஒருவர் செய்தால் அது குற்றமாகக் கருதப்படுகிறது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மார்ச் மாதம் முதல் இவர் 54,285 ரூபா சம்பளம் அடங்கலாக ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபா பெற்று வருகிறார். இது தவிர மார்ச் மாதம் தொடக்கம் 97,500 ரூபா ஓய்வூதிய கொடுப்பனவு, 50 ஆயிரம் ரூபா செயலாளர் கொடுப்பனவு, 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபா எரிபொருள் கொடுப்பனவு அடங்கலாக 3 லட்சத்து 49 ஆயிரம் ரூபா பெற்றுவருகிறார்.
இவரின் பாதுகாப்புக்கு 107 பொலிஸார், 550 இராணுவத்தினர் மற்றும் பல டசின் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் மீதான இறுதிநாள் விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இங்கு மேலும் கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக் ஷ இவ் வரவு–செலவுத் திட்டம் தொடர்பாக பாராளுமன்ற விவாதங்களில் கலந்து கொள்ளவில்லை. மாறாக விகாரைகளுக்கு சென்று விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இவர் தனது ஓய்வூதியமாக 97500 ரூபாவையும் இதர கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்கிறார். அதுமாத்திரமின்றி தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதன் காரணத்தால் அப்பதவிக்கான சம்பளத்தையுமான 105,000
ரூபாவையும், இதர கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்கிறார். இவ்வாறு நபர் ஒருவர் இரண்டு விதங்களில் சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்வது எவ்வாறு நியாயமாகும்? சாதாரண நபர் ஒருவர் இவ்வாறு செய்வதற்கு இயலுமாக உள்ளதா? எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு விதிவிலக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
வரவு–செலவுத் திட்ட விவாதத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சியென இருதரப்பிலிருந்தும் 182 உறுப்பினர்கள் தமது கருத்துக்களை இங்கு பதிவுசெய்திருக்கின்றனர். சிலர் பாராட்டியிருக்கின்றனர், சிலர் விமர்சித்திருக்கின்றனர். விமர்சனத்தை முன்வைத்தவர்கள் நாம் வெள்ளைக்காரர்களுக்கு எமது காணிகளை சொந்தமாக வழங்கப்போவதாக குற்றமும் சுமத்தியிருந்தனர். எனினும் முன்னைய ஆட்சிக் காலத்தின் போது எமது நாட்டின் பெறுமதிமிக்க காணிகள் வெள்ளைக்காரர்களுக்கு வழங்கப்பட்டன. வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவித்து இங்கு முதலீடுகளை அதிகரிப்பதுடன் தேசிய முதலீட்டாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் முன்னூரிமை வழங்கப்படவிருக்கிறது.
நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே எமது
வரவு–செலவுத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். எனவே அனைவரும் ஒன்றி ணைந்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி
யெழுப்புவோம். முதலீடுகளை அதிகரிப் போம், தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்து வோம், அனைவருமாக ஒன்றிணைந்து பய ணிப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM