(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் கிடையாது. தற்போது குடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் அனைத்திற்கும் வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் சட்டரீதியில் தீர்வை பெற்றுக் கொள்வோம் என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் இருந்து நீக்குவதற்கு தற்போது ஆளும் தரப்பினரால் பல சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் சொலிஷிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தற்போது அரசியல் அழுத்தங்களின் காரணமாகவே பொய்யான வழக்குகளை தாக்கல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
நீதியமைச்சின் முன்னாள் செயலாளர் சுஹத கம்லத் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க , ராஜித சேனாரத்ன, மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க ஆகியோர் கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு அழுத்தம் பிரயோகித்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பழிவாங்கலுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை எதிரணி விரைவில் முன்னெடுக்கும்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையினை தொடர்ந்து மாற்று வேட்பாளர் குறித்து எதிரணி ஆராய்வதாக ஆளும் தரப்பினரால் வதந்திகள் பரப்பி விடப்படுகின்றன. இது முற்றிலும் பொய்யான கருத்தாகும். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்பதில் எவ்வித மாற்று கருத்துக்களும் கிடையாது.
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் போது ஏதும் சட்ட சிக்கல்கள் ஏற்படுமா என்பதை முன்கூட்டி ஆராய்ந்தே எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார். ஆகவே இத்தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. எழுந்துள்ள சவால்களுக்கு சட்ட மார்க்கத்தின் ஊடாகவே தீர்வை முன்வைப்போம்.
நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள நிலைமையினை கருத்திற் கொண்டே பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவை அறிவித்தார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ எவ்விடயத்தை கருத்திற் கொண்டு அறிவிக்கப்பட்டார் என்பதை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நன்கு அறிவார்.
மீண்டும் ஒரு முறையற்ற அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கான அடித்தளமே இடப்படுகின்றது. ஆகவே யுத்தத்தை வெற்றிக் கொண்டவர் என்ற வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு எதிர் தரப்புடன் இணைந்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM