தடைசெய்யப்பட்ட  மீன்பிடி  வலைகளை  பயன்படுத்தி மீன்பிடித்த  ஐவர்  கைது : சீனக்குடாவில் சம்பவம்  

Published By: R. Kalaichelvan

01 Oct, 2019 | 04:35 PM
image

 (ஆர்.விதுஷா)

திருகோணமலை - சீனக்குடா  கடற்பரப்பில்  தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை உபயோகித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட  ஐவர் கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

கிழக்கு  கடற்படையினர் திருகோணமலை - சீனக்குடா கடற்பரப்பில் மேற்கொண்டிருந்த ரோந்து நடவடிக்கையின்  போது   மீன்பிடிப்படகொன்று  அவதானிக்கப்பட்டுள்ளது. அந்தபகுதிக்கு  விரைந்த  கடற்படையினர்  சோதனை  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.  

இதன் போது மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை  உபயோகித்து  மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமை தெரிய வந்துள்ளது. அதனையடுத்து அந்த படகில் பயணித்த  ஐவரும் கைது  செய்யப்பட்டனர்.  

சந்தேக நபர்கள் கிண்ணியா பகுதியை சேர்ந்த 33 வயதிற்கும் 60 வயதிற்கும்  இடைப்பட்ட வயதையுடையவர்கள் என  விசாரணைகளின்  போது   தெரிய வந்துள்ளது.  அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்டமீன்பிடி வலைகள் அவர்களின் மீன்பிடி படகு  என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சந்தேக நபர்களையும் அவர்களிடமிந்த கைப்பற்றிய பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக  திருகோணமலை கடல்வளத்துறை உதவி பணிப்பாளரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43