அர்ஜூன் மகேந்திரன் கையெழுத்திட்ட நாணய தாள்கள் செல்லுபடியாகுமா ? - சட்டவியாக்கியானம் கோரவுள்ள பந்துல 

Published By: Vishnu

01 Oct, 2019 | 03:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் கையெழுத்திட்ட நாணய தாள்கள் தற்போது செல்லுப்படியாகுமா என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் சட்டவியாக்கியானத்தை அடுத்த வாரம் கோரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அர்ஜுன மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படும் போது அவர் சிங்கப்பூர் நாட்டு பிரஜை .சிங்கப்பூர் நாட்டு பிரஜை பிறிதொரு நாட்டின் குடியுரிமையினை பெற கூடாது என்று அந்நாட்டு சட்டதிட்டங்கள் காணப்படுகின்றது.  

அதன் காரணமாக அவர் இலங்கையின் குடியுரிமையினை பெறவில்லை. பிறிதொரு நாட்டு பிரஜை   எமது நாட்டு  அரசியலமைப்பினை  எவ்வாறு மதித்து  குறித்த நியமணங்களை பெற்றுக் கொள்வார். ஆகவே இவரது நியமணம் முற்றிலும் அரசியலமைப்பிற்கு விரோதமானது.

இலங்கையின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய  பதவியேற்காத  பிறநாட்டு பிரஜை ஒருவர் கையெழுத்திட்டுள்ள நாணய  தாள்களே இன்றும் பயன்பாட்டில் உள்ளது. மத்திய வங்கியின்  முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கைச்சாத்திட்டுள்ள  நாணய தாள்களை பாவிக்கும் போது மத்திய வங்கியின் மீதான நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது. ஆகவே இந்த நாணயங்கள் செல்லுபடியானவையா என்பது தொடர்பில் அடுத்த வாரம்  உயர்நீதிமன்றில் சட்ட வியாக்கியானம் கோரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17