அமெரிக்காவில் தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவுஸ்திரேலிய பிரதமரை கேட்டுக்கொண்டார் என வெளியாகியுள்ள செய்தி சர்வதேச அரசியலில்; பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2016 ஜனாதிபதி தேர்தலின் போது டிரம்ப் ரஸ்யாவுடன் இணைந்து செயற்பட்டார என்பது குறித்து விசாரணை செய்யும் மியுல்லர் விசாரணையின் ஆரம்பத்தை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட்மொறிசனிடம் டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணையை நம்பகதன்மையற்றதாக காண்பிப்பதற்கான ஆதாரங்களை முன்வைக்குமாறு டிரம்ப் அவுஸ்திரேலிய பிரதமரை கேட்டுக்கொண்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலிய அரசாங்கமும் இதனை உறுதி செய்துள்ளதுடன் இது தொடர்பில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது என குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபிடெனை விசாரணை செய்யுமாறு டிரம்ப் உக்ரைன் ஜனாதிபதியை கோரியது தொடர்பில் அரசியல் கண்டனப்பிரேரணையை எதிர்கொண்டுள்ள தருணத்திலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமருக்கும் டிரம்பிற்கும் இடையிலான உரையாடல் குறித்த விபரங்கள் வழமைக்கு மாறாக வெள்ளை மாளிகையின் சில அதிகாரிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரம்ப் ரஸ்ய தொடர்பு குறித்த விசாரணைகளிற்கு உதவுவதற்கு எப்போதும் தயார் என தெரிவித்ததாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM