bestweb

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

Published By: Priyatharshan

01 Oct, 2019 | 12:15 PM
image

ஜனா­தி­பதித் தேர்­தலில் மூவ­ருக்­குமேல் போட்­டி­யி­டும்­போது ஒருவர் ஆகக்­கூ­டி­யது மூன்று வேட்­பா­ளர்­க­ளுக்கு 1,2, 3 என இலக்­க­மி­டலாம். விரும்­பினால் முத­லா­வது தெரி­வுக்கு புள்­ள­டியும் ஏனை­ய­வற்­றிற்கு இலக்­கங்­களும் இடலாம். ( x,2,3). 

1,2,3 என இலக்­க­மி­ட­வேண்­டு­மென ஒரு வழி­காட்டி மட்­டும்தான் Third Shedule (ஜனா­தி­பதி தேர்­தல்கள் சட்டம்) இல் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதே­போன்­றுதான் வாக்­க­ளிக்க வேண்­டு­மென்று கட்­டா­ய­மில்லை.

அதே­நேரம் பிரிவு 51(2) இன்­படி ஒரு வாக்­காளர் தாம் யாருக்கு வாக்­க­ளிக்க விரும்­பு­கிறார்; என்ற எண்­ணத்தை அவ­ரது வாக்­குச்­சீட்டில் கீறப்­பட்ட அடை­யாளம் பிர­தி­ப­லிக்­கின்­றது என்று திருப்­தி­கண்டால் அதனை ஏற்­க­வேண்டும். (ஆனாலும் 1,2,3 என எழு­து­வது சிறந்­தது.)

அதேபோல், விரும்­பினால் ஒரு­வ­ருக்கு மட்டும் வாக்­க­ளித்து விட்டு ஏனைய இலக்­கங்­களை விட்­டு­வி­டலாம். அல்­லது இரு­வ­ருக்கும் வாக்­க­ளிக்­கலாம். மூவ­ருக்கும் வாக்­க­ளிக்க வேண்­டு­மென்­பது கட்­டா­ய­மில்லை. ( இவற்றைக் குறிப்­பிடக் காரணம் பலர் பின்­னூட்டம் மற்றும் inbox இல் இவ்­வா­றான கேள்­வி­களை நிறை­யவே கேட்­கின்­றார்கள்.)

ஒருவர் முதலாம் இலக்­கத்தை எழு­தாமல் அல்­லது புள்­ளடி இடாமல் 2 என்றோ அல்­லது 3 என்றோ அல்­லது 2,3 என்றோ எழு­தினால் வாக்கு நிரா­க­ரிக்­கப்­படும். [பிரிவு 51(1)(e)(111)]

இதன்­மூலம் புரிந்­து­கொள்­வது முத­லா­வது வாக்கு மாத்­தி­ரமே வாக்­காகும். ஏனை­யவை விருப்­பத்­தெ­ரிவு வாக்­கு­களா? என்ற கேள்­வியை எழுப்­பினால் பதில் “ இல்லை” என்­ப­தாகும். ஏனெனில் அவை நேர­டி­யாக  எண்­ணப்­ப­டு­வ­தில்லை. பதி­லீ­டா­கத்தான் எண்­ணப்­ப­டு­கின்­றன.

அதா­வது, பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அளிக்­கப்­ப­டு­கின்ற மூன்று விருப்பத் தெரிவு வாக்­கு­களும் எண்­ணப்­ப­டு­கின்­றன. இங்கு அவ்­வாறு இல்லை. ஆனால் சில­நேரம் இரண்­டா­வது அல்­லது மூன்­றா­வது தெரிவு வாக்­காக எண்­ணப்­ப­டலாம் விருப்பத் தெரிவு வாக்­காக அல்ல.

சுருங்­கக்­கூறின் ஒவ்­வொருவருக்கும் முத­லா­வது தெரிவு மட்­டுமே வாக்கு.

சில­நேரம் அவ­ரு­டைய முத­லா­வது வாக்­குக்குப் பதி­லாக இரண்­டா­வது அல்­லது மூன்­றா­வது தெரிவு,  வாக்­காக மாறலாம். சுருங்­கக்­கூறின் ஒரு­வ­ருக்கு முத­லா­வது தெரிவு வாக்­காக இருக்­கலாம் இன்­னொ­ரு­வ­ருக்கு இரண்­டா­வது தெரிவு வாக்­காக இருக்­கலாம். இன்­னொ­ரு­வ­ருக்கு மூன்­றா­வது தெரிவு வாக்­காக இருக்­கலாம். ஆனால் ஒரு­போதும் மூன்று தெரிவும் அல்­லது இரண்டு தெரி­வுகள் வாக்­காக அமைய முடி­யாது. ஒரு­வ­ருக்கு ஒரு வாக்கு மட்­டுமே.

இது எவ்­வாறு எனப்­பார்ப்போம்.

வாக்­கெண்ணும் முறை

முத­லா­வது சுற்றில் முத­லா­வது வாக்கு எண்­ணப்­படும். ஒருவர் 50% ஐத் தாண்­டினால் அவர் ஜனா­தி­பதி. யாரும் 50% ஐத் தாண்­டா­த­போது இரண்டாம் சுற்று எண்­ணிக்கை. மூன்றாம் சுற்று எண்­ணிக்கை என்ற ஒன்று இல்லை. சிலர் நினைக்­கின்­றார்கள்; இரண்டாம் சுற்றில் இரண்டாம் வாக்கு எண்­ணப்­பட்டு அதிலும் யாரும் 50% பெறா­விட்டால் மூன்­றா­வது சுற்றில் மூன்றாம் வாக்கு எண்­ணப்­ப­டு­மென்று. இது பிழை­யாகும்.

முத­லா­வது சுற்றில் முதலாம் வாக்கின் அடிப்­ப­டையில் ஒவ்­வொ­ரு­வரும் பெற்­ற­வாக்­குகள் கூட்­டப்­ப­டு­வ­தோடு அவர்­க­ளது வாக்குச் சீட்­டுக்கள் வெவ்­வே­றாக கட்­டப்­படும்.

இப்­பொ­ழுது முதல் இரு வேட்­பா­ளர்­களைத் தவிர ஏனைய வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வார்கள். 

உதா­ர­ண­மாக A,B,C,D,E என்ற ஐந்து வேட்­பா­ளர்­களில் C,D,E போட்­டியில் இருந்து நீக்­கப்­பட்­டபின் மீண்டும் அவர்­க­ளது கட்­டப்­பட்ட வாக்குகள் அவிழ்க்­கப்­பட்டு அவற்றில் A அல்­லது B இற்கு இரண்­டா­வது வாக்­கு­களை யாரும் வழங்­கி­யி­ருந்தால் அவை A அல்­லது B யின் வாக்­கு­க­ளோடு கூட்­டப்­ப­டு­வ­துடன் அந்த வாக்குச் சீட்­டுக்­களும் A அல்­லது B யின் வாக்குச் சீட்­டு­க­ளுடன் கட்­டப்­படும்.

அதன்பின் C,D,E யின் எஞ்­சிய வாக்­கு­களில் A அல்­லது B யிற்கு யாரா­வது தமது மூன்­றா­வது வாக்கை அளித்­தி­ருந்­தி­ருந்தால் மேற்­கூறி­ய­து­போன்று அவையும் கூட்­டப்­பட்டு உரி­ய­வரின் வாக்­கு­க­ளுடன் கட்­டப்­படும். ( அதா­வது இவர்கள் தமது இரண்­டா­வது வாக்கை C,D,E ஆகி­யோ­ருக்குள் தாம் முத­லா­வது வாக்கை வழங்­காத ஒரு­வ­ருக்கு கொடுத்­தி­ருப்­பார்கள். அது பிர­யோ­ச­ன­மற்ற வாக்கு).

இப்­பொ­ழுது யார் அதி­கூ­டிய வாக்குப் பெற்­றி­ருக்­கின்­றாரோ அவரே வெற்­றி­யாளர்.

எனவே, 50% என்ற ஒன்று அவ­சி­ய­மில்லை. முத­லா­வது சுற்றில் 50% இற்கு மேல் பெற்­றி­ருந்தால் அதன்பின் இரண்டாம் மூன்றாம் வாக்­கு­களை எண்­ண­வேண்­டு­மென்ற அவ­சி­ய­மில்லை. காரணம் ஏனைய அனை­வ­ருமே அடுத்­த­வ­ருக்கு தமது இரண்டாம் அல்­லது மூன்றாம் வாக்கை அளித்­தி­ருந்­தாலும் அவை 50% ஐத் தாண்­ட­மு­டி­யாது.

இதன் யதார்த்­தத்தைப் பாருங்கள்.

நாம் அளிக்­கின்ற முத­லா­வது வாக்கைப் பொறுத்­த­வரை பிர­தான இரு வேட்­பா­ளரை விடுத்து ஏனைய வேட்­பா­ளர்­கட்கு அளிக்­கின்ற வாக்­குக்கு எந்தப் பெறு­ம­தி­யு­மில்லை. பிர­தான வேட்­பா­ளர்­களில் ஒரு­வ­ருக்கு அளித்தால் ஒன்றில் ஒருவர் தெரி­வு­செய்­யப்­ப­டு­வது தடுக்­கப்­ப­டலாம். அடுத்­தவர் தெரி­வு­செய்­யப்­பட அது உத­வலாம்.

இப்­பொ­ழுது இரண்டாம் வாக்­குக்கு வருவோம். Aயும் Bயும் பிர­தான வேட்­பா­ளர்­க­ளெனில் அவர்­க­ளி­லொ­ரு­வ­ருக்கு முதலாம் வாக்கை இடு­பவர் அவ­ரது ஏனைய இரு வாக்­கு­க­ளையும் யாருக்கு அளித்­தாலும் அதற்கு எது­வித பெறு­ம­தியும் இல்லை. அவை எண் ணப்­படப் போவ­து­மில்லை. இவரைப் பொறுத்­த­வரை இவ­ரது முத­லா­வது தெரிவு மட்­டுமே வாக்­காகும். ஏனெனில் அவ­ரது வாக்­குச்­சீட்டு அவர் வாக்­க­ளித்த பிர­தான வேட்­பா­ள­ருக்­கு­ரிய வாக்­குச்­சீட்­டாக கட்­டி­வைக்­கப்­படும். இரண்டாம் சுற்றில் அது அவிழ்க்­கப்­ப­டவே மாட்­டாது.

இப்­பொ­ழுது இவர் 1,2,3 என மூவ­ருக்கு இலக்­க­மிட்­டி­ருந்­தாலும் இவ­ரது வாக்கு ஒன்றே. சிலர் நமக்கு மூன்று வாக்­குகள் இருப்­பதால் இம்­முறை யாரும் 50% பெறாத சூழ்­நி­லையில் ஏனைய வாக்­கு­க­ளையும் பாவிக்­க­வேண்­டு­மென்று முக­நூல்­களில் கூறு­கின்­றார்­களே! அது சரியா? என சிந்­தி­யுங்கள். 

எனவே, பிர­தான வேட்­பாளர் இரு­வரில் ஒரு­வ­ருக்கு வாக்­க­ளிப்­ப­வர்­களைப் பொறுத்­த­வரை முத­லா­வது வாக்கு மட்­டும்தான் வாக்­காகும். ஏனைய வாக்­கு­களைப் பாவிப்­பதால் பாதிப்­பு­மில்லை, நன்­மை­யு­மில்லை.

பிர­தான வேட்­பா­ளர்­க­ளில்­லா­த­வர்க்கு  (C,D,E) வாக்­க­ளிக்­கும்­போது, இவர்­க­ளுக்கு அளிக்­கப்­ப­டு­கின்ற முத­லா­வது வாக்­கினால் எது­வித பிர­யோ­ச­ன­மு­மில்லை இத்­தேர்­தலைப் பொறுத்­த­வரை. ஆனால் இவர்கள் (உதா­ர­ண­மாக முஸ்­லிம்கள்) எமது கட்­சிக்கு இவ்­வ­ள­வு­தூரம் வாக்­க­ளித்­தார்கள் என்ற நன்­றிக்­கடன் சில­வேளை இருக்­கலாம். அதே­நேரம் அதி­க­ரித்த அந்த வாக்கைக் காட்டி பொதுத்­தேர்­தலில் தனது வாக்கு வங்­கியை மேலும் அதி­க­ரிக்க அவர்கள் முற்­ப­டலாம்.

மறு­புறம் நாம் யாரின் தெரிவை தவிர்க்க நினைக்­கின்­றோமோ அவ­ருக்­கெ­தி­ராக அடு த்த பிர­தான வேட்­பா­ளரின் வாக்கை அதி­க­ரிக்க அவ்­வாக்குப் பாவிக்­கப்­ப­டாமல் போகி­றது. அதன்­மூலம் நாம் விரும்­பாத வேட்­பா­ளரின் வெற்­றிக்கு உத­வு­கின்றோம்.

இந்­தப்­ பா­திப்பை இந்த இரண்­டா­வது வாக்கு ஈடுசெய்யும்.

அதா­வது உதிரி வேட்­பா­ளர்­கட்கு நாம் அளித்த முத­லா­வது வாக்கு பிர­யோ­ச­னமற்­ றுப்­போக இப்­பொ­ழுது இரண்­டா­வது வாக்கை நமது வாக்­காகப் பயன்­ப­டுத்­தலாம்.

இரண்­டா­வது வாக்கு

நாம் A தோற்­க­டிக்­க­ப்ப­ட­வேண்­டு­மென விரும்­பு­கி­றோ­மெனில் முத­லா­வது வாக்கை உதிரி வேட்­பா­ளர்­க­ளுக்கு அளித்­தி­ருந்தால் எமது 2வது வாக்கை கட்­டாயம் Bயிற்கு அளித்­தாக வேண்டும். அவ்­வாறு அளிக்­கா­விட்டால் முத­லா­வது வாக்கை உதி­ரி­க­ளுக்கு அளித்­த­தன்­மூலம் Bயின் வாக்­குகள் கூடு­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­காமை Aயின் வெற்­றிக்கு உத­வு­வ­தாக அமையும்.

B யிற்கு அளிக்­கப்­படும் இரண்­டா­வது வாக்கு முதல் சுற்றில் யாரும் 50% பெறாத நிலை­யி­லேயே உதவும் என்­ப­தையும் கவ­னத்­திற்­கொள்வோம்.

இப்­பொ­ழுது முத­லா­வது சுற்­றி­லேயே நாம் தோற்­க­டிக்க விரும்பும் A,  50% பெற்­று­விட்டார் எனக்­கொள்வோம். நாம் B யிற்கு முத­லா­வது வாக்கை அளித்­தி­ருந்­தாலும் Aயின் வெற்­றியைத் தடுத்து நிறுத்­தி­யி­ருக்க முடி­யாது. நமது வாக்­குகள் இல்­லா­ம­லேயே அவர் 50% பெற்­று­விட்டார்.

இங்கு எழும் பிரச்­சினை இரண்டு: ஒன்று அவ­ரு­டைய எந்த இன­வா­தத்­துக்­காக நாம் அவரைத் தோற்­க­டிக்க நினைத்­தோமோ அந்த இன­வா­தத்தில் அவர் இன்னும் மூர்க்கத் தன­மாக இருப்பார். ஏனெனில் அவ­ருக்கு வாக்­க­ளித்­த­வர்கள் அவ­ரது இன­வா­தத்தை ஏற்­றுக்­கொண்­ட­வர்கள். எனவே, அவர்­களைத் திருப்­திப்­ப­டுத்த நம்­மீது இன­வாதக் கணைகள் வீசப்­படும். மறு­புறம் அவ­ருக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என்­கின்ற அவ­ரது வெஞ்­சினம் நம்­மீது தீயா­கக்­கொட்டும்.

இப்­பொ­ழுது சிந்­தி­யுங்கள், நாம் தேர்­தலில் யாருக்கு வாக்­க­ளிப்­பது எனத் தீர்­மா­னிக்­கின்ற நேரம் வந்­து­விட்­டதா? இன்னும் வேட்­பு­மனு கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை. மக்­களின் சரி­யான உணர்வை அறிய இன்னும் நேர­மி­ருக்­கி­றது. இந்­நி­லையில் விடி­ய­முன்னே தீர்­மானம் எடுத்து முக­நூல்­களில் பட்­டி­மன்றம் நடத்தும் சகோ­த­ரர்­களே சிந்­தி­யுங்கள். இரண்டு,  சிறு­பான்மை இல்­லாமல் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­பெ­றலாம் என்ற எண்­ணப்­பாடு பொது­வாக பெரும்­பான்மை சமூ­கத்­திடம் உறு­தி­பெறும். விளைவு எதிர்­கா­லத்தில் ஒவ்­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் இன­வா­தத்தைக் கையி­லெ­டுக்கத் தொடங்­கு­வார்கள். அதன்பின், ஒரு ஜன­நா­யக நாட்டில் அரசு என்­பது "மக்­களால் மக்­க­ளுக்­காக செய்­யப்­படும் மக்­க­ளாட்சி என்­பது மாறி" "பெரும்­பான்மை சமூ­கத்தால் பெரும்­பான்மை சமூ­கத்­துக்­காக செய்­யப்­படும் பெரும்­பான்மை சமூக ஆட்சி"என்ற பதம் நிலை­பெறும் என்­ப­தையும் அதன் விளை­வு­க­ளையும் கவ­னத்­திற்­கொள்க. நாம் எந்த நாட்­டிற்கு சென்று வாழ்­வது என்­ப­தையும் சிந்­திக்­குக.

மூன்­றா­வது வாக்கு

நீங்கள் முத­லா­வது வாக்கை A அல்­லது B யிற்கு அளித்தால் ஏனைய இரு வாக்­கு­களை யாருக்கு இலக்­க­மிட்­டாலும் பெறு­ம­தி­யில்லை. உங்கள் வாக்கு ஒன்றே!

முத­லா­வது வாக்கை உதி­ரி­க­ளுக்கு இட் டால் இரண்­டா­வது வாக்கை A அல்­லது B யிற்கு அளித்தால் அதுதான் உங்கள் வாக்கு. ஏனை­யவை வெறும் இலக்­கங்­களே! எனவே, மூன்­றா­வது வாக்கை யாருக்கு அளித்­தாலும் பிர­யோ­சனம் இல்லை.

முதல் இருவாக்­கு­க­ளையும் உதி­ரி­க­ளுக்கு அளித்­த­வர்கள் மூன்­றா­வது வாக்கை ஒரு பிர­தான வேட்­பா­ள­ருக்கு அளித்தால் அதற்கு முதல் சுற்றில் யாரும் 50% பெறா­த­போது பெறு­மா­ன­மி­ருக்கும். அதுதான் உங்­க­ளது வாக்­காகும். எனவே, ஒருவருக்கு வாக்கு ஒன்றே. மாறாக மூன்று என்றால் வாக்காளர்கள் ஒரு கோடி அறுபது இலட்ச மென்றால் வாக்குகள் நான்கு கோடி எண்பது இலட்சமாக வேண்டும். அவ்வாறு இல்லை. பாராளுமன்றத் தேர்தலிலும் கட் சிக்கு அளிப்பது மாத்திரமே வாக்கு. ஆனா லும் விருப்பத் தெரிவு வாக்குகள் மூன்று. அந்த மூன்றையும் அங்கு மூவரைத் தெரிவு செய்யப் பாவிக்கலாம். 

இங்கு வாக்கும் ஒன்று. தெரிவுசெய்வதும் ஒருவரையே!

இதனை ஒரு கிராமிய, பாமரப்பாணியில் கூறுவதாக இருந்தால், நாம் முதலாவது வாக்கை ஒருவருக்கு அளித்துவிட்டுக் கூறுகின்றோம்; இவர் முதல் இரண்டிற்குள் வராவிட்டால் எனது முதலாவது வாக்குத் ‘துப்பல்’; இரண்டாவது வாக்குத்தான் எனது வாக்காகும் என்று.

அடுத்ததாக கூறுகின்றோம்; அவரும் முதல் இரண்டிற்குள் வராவிட்டால் அதுவும் ‘துப்பல்’ மூன்றாவது வாக்குத்தான் எனது வாக்காகும்; என்று.

எனவே, சிந்தித்து யார் குறைந்த பாதிப் பானவர், யாரை நாம் எவ்வளவு ஒன்று பட்டாலும் தோற்கடிக்கவே முடியாது; 

(அவ்வாறான ஒரு சூழ்நிலை இருந்தால்) என்பவற்றைக் கவனத்திற்கொண்டு உங்கள் வாக்குகளின் பெறுமதி உணர்ந்து செயற் படுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right