மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பாலாவி, புழுதிவயல் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29) மாலை உயிரிழந்துள்ளார்.
பாலாவி, புழுதிவயல் பகுதியைச் சேர்ந்த முகம்மது சிராஜ் (வயது 37) எனும் 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
நேற்று பெய்த கடும் மழை போது பாலாவி புழுதிவயல் பகுதியைச் சேர்ந்த மூவர், புழுதிவயல் பிரதேசத்தில் உள்ள கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போதே குறித்த நபர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து , அங்கிருந்தவர்கள் குறித்த நபரை உடனடியாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM