முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு கடந்த காலத்தில் இரு யானைக்குட்டிகள் வழங்கப்பட்டமை தொடர்பாக முழுமையான விசாரணை ஆரம்பமாகியுள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் கிஹான் பிலப்பிட்டியவிற்கு அறிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக் ஷ உள்ளிட்ட மேலும் இருவருக்கு வழங்கப்பட்ட நான்கு யானைக் குட்டிகள் தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட அரச சட்டவாதி திலீபா பீரிஸ் நீதிவானிடம் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக வைத்துக்கொள்ளப்பட்ட 20 யானைக்குட்டிகள் அடுத்து வரும் இரு வாரங்களில் மீட்கப்படும் எனவும் இதன் போது அவர் தெரிவித்தார். இவ்வாறு கைப்பற்றப்படும் யானைக் குட்டிகளை உடவளவ தேசிய பூங்காவில் விஷேட தடுப்பில் வைக்கவுள்ளதாகவும், அது தொடர்பிலான பணிகள் 75 வீதம் நிறைவுபெற்றுள்ளதாகவும் சட்டத்தரணி திலீபா பீரிஸ் மன்றுக்கு அறிவித்தார். இதனிடையே இலங்கையின் சட்டங்களின் படி நிறைவேற்று அதிகாரங்களை கொண்ட ஜனாதிபதிக்கு தனது விருப்பங்களிற்கு ஏற்ப யானைகளை வழங்குவதற்கான அதிகாரங்கள் இல்லை.
நிறைவேற்று அதிகாரங்களைக்கொண்ட ஜனாதிபதி அதனை செய்திருந்தால் அது சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான செயல் என்றே கருதப்படும்.
சட்டவிரோதமாக யானைகளை வைத்தி ருந்த குற்றச்சாட்டுக்களுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி, பௌத்தமதகுரு உட்பட 35 பேர் விசாரிக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM