'உலகியல் அமைப்பைக் கிறிஸ்துவில் புதுப்பித்தல்' எனும் தொனிப்பொருளில் பொது நிலையினருக்கு மன்னார் மறை மாவட்ட குடும்ப நலப் பணியகத்தில் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் விசேட கருத்தமர்வு இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட குடும்ப நலப்பணியும் மற்றும் பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்தந்தை எஸ். எமிலியானுஸ்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி மேதகு இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டார்.
குறித்த கருத்தமர்வில் சிறப்பு வளவாளராக கலாநிதி எஸ். ஜே. இம்மானுவல் அடிகளார் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினார்.
மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும், அதனைத் தீர்த்துக்கொள்ளுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
குறித்த கருத்தமர்வில் சமூகத்தினர், அரச, அரச சார்பற்ற அதிகாரிகள், சமூக சேவையாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் என நூற்றூக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM