காஸ்மீரில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக யுத்தமொன்று மூழக்கூடும் என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் உரையாற்றுகையில் இம்ரான் கான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
காஸ்மீரில் தற்போது காணப்படும் நிலைமையை ஐநாவிற்கான ஒரு சவால் என வர்ணித்துள்ள இம்ரான்கான் இந்தியா பாக்கிஸ்தான் இடையிலான மோதலின் தாக்கம் எல்லைக்கு அப்பால் நெடுந்தூரம் வரை எதிரொலிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் நடவடிக்கைகள் காஸ்மீர் மக்களை தீவிரவாதமயப்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ள இம்ரான்கான் இந்தியாவின் நடவடிக்கைகளால் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் நடவடிக்கைகளிற்கு எதிர்வினை காணப்படும், பாக்கிஸ்தானை குற்றம்சாட்டுவார்கள், கடந்த பெப்ரவரி போல மீண்டும் இரு நாடுகளும் அணுவாயுத மோதலை நோக்கி செல்லக்கூடும் என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மரபு வழி யுத்தம் ஆரம்பித்தால் எதுவும் நடக்கலாம் என தெரிவித்துள்ள இம்ரான்கான் தனது அயல்நாட்டை விட ஏழு மடங்கு சிறியதான நாட்டிற்கு இரண்டு தெரிவுகளே உள்ளன, ஒன்று சரணடைவது அல்லது இறுதிவரை போராடுவது நாங்கள் இறுதி வரை போராடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அணுவாயுத நாடுகள் இறுதிவரை மோதும்போது அதன் விளைவுகள் எல்லைக்கு அப்பால் வெகு தொலைவு வரை காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM