மழையின் ஆட்டத்தால் போட்டியின் திகதி மாறியது!

Published By: Vishnu

27 Sep, 2019 | 07:36 PM
image

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

அதன்படி இன்றைய தினம் கராச்சி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த முதலாவது ஒருநாள் போட்டியானது மழை காரணமாக நாணய சுழற்சிக்கூட மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டது.

இந் நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளைமறுதினம் 29 ஆம் திகதி அதே மைதானத்தில் நடத்துவதற்கு முன்னதாகவே தீர்மானித்திருந்தது. எனினும் அங்கு தொடரும் மழையுடனான வானிலை காரணமாக போட்டி 30 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி 30 ஆம் திகதி மாலை 3.30 க்கு அதே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35