இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
அதன்படி இன்றைய தினம் கராச்சி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த முதலாவது ஒருநாள் போட்டியானது மழை காரணமாக நாணய சுழற்சிக்கூட மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டது.
இந் நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளைமறுதினம் 29 ஆம் திகதி அதே மைதானத்தில் நடத்துவதற்கு முன்னதாகவே தீர்மானித்திருந்தது. எனினும் அங்கு தொடரும் மழையுடனான வானிலை காரணமாக போட்டி 30 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி 30 ஆம் திகதி மாலை 3.30 க்கு அதே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM