(ஆர்.யசி, நா.தினுஷா)
ஐக்கிய தேசிய கட்சியினர் கட்சியின் மாநாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதியும் தமது மக்கள் பலத்தை நிரூபிக்கும் கூட்டத்தை 10 ஆம் திகதியும் நடத்தவுள்ளதாக கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பட்டத்தன் பின்னர் சிறிகொத்தாவில் இடம்பெற்ற விசேட ஊடவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவற்றை கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானம் எடுக்க ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுவும் பிரதமர் தலைமையில் கூடி இணக்கம் கண்டது.
இதன்போது தேர்தல் முறைமையில் மாற்றங்களை கொண்டுவருவது மற்றும் பிரதமரின் இணக்கப்பாட்டுக்கு அமைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழித்தல் உள்ளிட்ட எமது அரசாங்கம் இணக்கம் தெரிவித்த அரசியல் அமைப்பு முறைமையை உருவாக்குவதால் முதல்கொண்டு அனைத்தையும் நிறைவேற்றுவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இவை தெரிவுக்குழுவிழும் பாராளுமன்ற குழுவிலும் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் பிரதமர் மற்றும் கட்சியின் தலைமைப்பதவி ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்ந்தும் இருக்கும். இதற்கும் அனைவரும் இணைக்கம் தெரிவித்தனர். எமது ஜனாதிபதி -எமது பிரதமரின் தலைமையில் ஆட்சியை உருவாக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
அத்துடன் நாம் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியாக இணைந்து பரந்த கூட்டணியாக தேர்தலில் களமிறங்கவுள்ளோம். இதுவரை எம்முடன் இணையாத கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பரந்த கூட்டணியாக வெற்றியை பெற்றுக்கொள்ளவே தீர்மானம் எடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM