நாட்டின் சில பகுதிகளில் நாளை 18 மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்குமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கடவத்தை நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளுக்கு அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இரண்டு கட்டங்களின் கீழ் நாளை முதல் 18 மணி நேரம் நீர் வெட்டு அமுல்பப்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொஸ்ஸின்னாவிலிருந்து கிரிந்திவிட தொடக்கம் கனேமுள்ள-கடவத்தை வீதி, கனேமுள்ள, கலஹிட்டியவ, நெடுன, கட்டமுள்ள, கொஸ்ஸின்னா, பரகன்தேனிய மற்றும் பளகலயகொட வரை நாளை (25-09-2019) இரவு 9 மணியிலிருந்து , நாளை மறுநாள் (26.09.2019) புதன்கிழமை 3 மணி வரை 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மேலும் ஹொரகொல்லா, மாகிலங்கமுவ, திப்படுகொட, குடபோலதா, மிடெனெல்லவிட்ட, ரத்மல்விட மற்றும் கொசோவிட்ட ஆகிய பகுதிகளிலும் நீர் வழங்கல் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீர் வெட்டு இரண்டாம் கட்டம் நாளை பிற்பகல் 3 மணி முதல் வியாழக்கிழமை காலை 9 மணி வரை அமுலில் இருக்கும்.
கடவத்தையிலிருந்து கணேமுல்ல சாலையில் வெலிபில்லாவ, தங்கஹவெல, இஹல கரகாஹமுனா, மகர,நுகேகொட உள்ளிட்ட பொல்ஹென சந்தி வரை நீர் வழங்கல் இந்த காலகட்டத்தில் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM