இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று இருபதுக்கு - 20 தொடரை சமன் செய்துள்ளது.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
முதலவதாக இடம்பெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றிருந்தது.
இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரின் இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை 20 ஓவர்கள் நிறைவில் பெற்றது. இந்திய அணி சார்பில் தவான் 36 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார்.
பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் ரபடா 3 விக்கெட்டுக்களையும், பெலக்வாயோ மற்றும் போர்டுயின் ஆகியோர் இரு விக்கெட்டுக்களையும், ஷம்மி ஆகியோர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
135 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 16.5 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஹெண்ரிக்ஸ் 28 ஓட்டத்தை பெற்று ஆட்டமிழந்ததுடன் பவுமா 27 ஓட்டத்தையும், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டீகொக் 52 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 79 ஓட்டங்களையும் குவித்தனர்.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM